பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

139



நாழி அரிசி சோறு உண்டவன் நமனுக்கு உயிர் கொடான்.

நாழி அரிசிச் சோறு தின்றாலும் நாய்க்குக் குடல் நிறையாது. 14400


நாழி அரிசி நாய் கொண்டு போனால் ஞானமும் கல்வியும் பேய் கொண்டு போகும்.

நாழி உடைந்தால் நெல்லுக்குச் சேதமா?

நாழி உப்பும் நாழி அப்பும் நாழி ஆன வாறு போல.

(சிவ வாக்கியர்.)

நாழி உள்ளார்க்கு நானாழி கடனோ?

(கடன் நொய்.)

நாழி நெல்லுக்கு ஓர் அந்து. 14405


நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாய் நிர்வாணந்தான்.

(நாய்ப் பிட்டம் அம்மணம்.)

நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகாது.

நாழிப் பால் வார்த்தாலும் நடுச் சொல்வர் அறிவுடையோர்.

நாழி மாவுக்கு நானாழி வெள்ளம்.

(வெல்லம்.)

நாழி முகவாது நானாழி. 14410

(நல்வழி.)


நாழியாய சமுத்திரத்தில் நானாழி மொள்ளலாமா?

நாழியை மூளி என்றால் மரக்காலைப் பொட்டை என்பது போல்.

நாழிவர மூதேவி; மரக்கால் வரச் சீதேவி.

(நாழிவரச் சீதேவி...மூதேவி.)

நாள் ஆற்றுகிறது நல்லார் ஆற்றார்.

நான் ஏர் உழும் போதே வரப்பிலே ஏற்றினாளாம். 14415


நான் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமும்

நான் ஏறினால் கீழ் ஏறும்.

நாள் செய்வது நல்லுற்றார் செய்யார்.

(நல்லோர்.)

நாள் சென்ற கொடை நடைக்கூலி ஆகும்.

நான் சென்ற கொடை நடைக் கூலியும் ஆகாது. 14420


நாள் வருமட்டும் நாராய்த் தோலாய் இழுத்துக் கொண்டிருக்கும்.

நாளுக்கு நாள் நகர்ந்தது சாண் அம்மானை.

நாளுக்கு நான் நரியாய்ப் போகிறது.