பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

தமிழ்ப் பழமொழிகள்




நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை.

(நாளும் கோளும், வெற்றிவேற்கை)

நாளும் கோளும் நன்மை செய்யும். 14425


நாளை என்பது இல்லை என்பதற்கு அடையாளம்.

(ஏமாற்றுவதற்கு.)

நாளை என்பது நமன் நாள் ஆகும்.

நாளை என்பதைவிட இல்லை என்பவர் நல்லவர்.

நாளைக்குக் கல்யாணம்; பிடியடி பாக்கு வெற்றிலையை.

நாளைக்குத் தாலி கட்டுகிறேன்; கழுத்தே சுகமாய் இரு. 14430


நாளைக்குத் தின்கிற பலாப்பழத்திலும் இன்றைக்குத் தின்கிறகளாப் பழம் நல்லது.

நாளைக்குத் தெரியும் நாச்சியாத்தாள் மாரடி.

(நாளைத் தெரியும்.)

நாளைக்கும் சீர் நடக்கத்தான் போகிறது; இன்றைக்கும் சீர் இருக்கத்தான் போகிறது.

நாளைக் குறைத்தால் தன்னைக் குறைக்கும்.

நாளை மடக்கினால் நம்மை மடக்கும். 14435


நாளை வரும் நெற்குவியலிலும் இன்று உள்ள படி விதை பெரிதென்று விழுங்கலாமா?

நாளை வரும் பலாக்காயை விட இன்று வரும் களாக்காய் நல்லது.

(தின்கிற பழத்தைவிட)

நாற்கலக் கூழுக்கு நானே அதிகாரி.

நாற்பதுக்குமேல் சென்றால் நாய்க் குணம்.

(நாய்க்குச் சரி.)

நாற்பதுக்குமேல் நாய்க்குணம்; அம்பதுக்கு ஆட்டம்; அறுபதுக்கு ஓட்டம். 14440


நாற்பது வந்தால் நரை வரும்.

நாற்றக் கூழுக்கு அழுகல் மாங்காய்.

நாற்று முப்பது சாற்று முப்பது.

நாறல் சடலம் நலம் இல்லா மட்பாண்டம்.

நாறல் சாணியை மிதிப்பானேன்? நல்ல தண்ணீர் வார்த்துக் கழுவு வானேன்? 14445

(நாறல் மலத்தை.)


நாறல் சோற்றுக்குப் பதம் பார்க்கிறது ஏன்?

நாறல் தூற்றல் நரிக்குக் கொண்டாட்டம்.