பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

143



நான்று கொண்டு சாகச் சாண் கயிறு பஞ்சமா?

நானிலந் தன்னில் நாயகம் கல்வி.

நானும் அறியேன், அவளும் பொய் சொல்லாள். 14495

(கம்பர் கூற்று.)


நானும் ஓட்டை; என் நடு வீடும் பொத்தல்.

நானும் நரைத்து நரை மண்டை ஆனேன்; காடு கடக்கக் கண்டது புதுமை.

நானும் பிழைத்தேன்; என் கந்தலும் பிழைத்தது என்றானாம்.

நானும் பூசாரி; எனக்கும் சுவாமி ஆட்டம் உண்டு.

நானும் வந்தேன், மாமியார் வீட்டு நாற்றமும் போயிற்று. 14500


நானோ நானல்லவோ என்று திரிகிறான்.

(அகம்பாவம்.)