இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ப் பழமொழிகள்
143
நான்று கொண்டு சாகச் சாண் கயிறு பஞ்சமா?
நானிலந் தன்னில் நாயகம் கல்வி.
நானும் அறியேன், அவளும் பொய் சொல்லாள். 14495
- (கம்பர் கூற்று.)
நானும் ஓட்டை; என் நடு வீடும் பொத்தல்.
நானும் நரைத்து நரை மண்டை ஆனேன்; காடு கடக்கக் கண்டது புதுமை.
நானும் பிழைத்தேன்; என் கந்தலும் பிழைத்தது என்றானாம்.
நானும் பூசாரி; எனக்கும் சுவாமி ஆட்டம் உண்டு.
நானும் வந்தேன், மாமியார் வீட்டு நாற்றமும் போயிற்று. 14500
நானோ நானல்லவோ என்று திரிகிறான்.
- (அகம்பாவம்.)