பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தமிழ்ப் பழமொழிகள்




நி


நிச்சயம் இல்லாத வாழ்வு; நிலை இல்லாத காயம்.

நிசங்கனுக்குக் கோட்டை முற்றுகை கண்டது உண்டா?

நிசம் ஒன்று பல தீங்கு நீக்கும்.

நிசம் நிச போகம்; வியாசம் வியாச போகம். 14505


நித்தம் என்றால் முத்தமும் சலிக்கும்.

(முற்றமும்.)

நித்தம் சாவார்க்கு அழுவார் உண்டா?

நித்தம் நடந்தால் முற்றமும் சலிக்கும்.

(நித்தம் போனால்.)

நித்திய கண்டம் பூர்ணாயுசு.

நித்திய கல்யாணம்; பச்சைத் தோரணம். 14510


நித்திய தரித்திரத் தகப்பனாரை நின்ற நிலையில் வரச் சொன்னாள்.

நித்திய தரித்திரனுக்கு ஆசை அதிகம்.

நித்தியம் கிடைக்குமா அமாவாசைச் சோறு?

நித்திரைக்கு நேரிழை சத்துரு.

(நித்திரை சத்துரு, நேரிழை சத்துரு.)

நித்திரை சுகம் அறியாது; பசி ருசி அறியாது. 14515


நித்திரையிலும் தண்ணீர்ப்பால் குடிக்கிறது இல்லை.

நிதம் கண்ட கோழி நிறம் கொடுக்கும்.

(நிறம் கெடும்.)

நிதானியே நேராணி.

நிதி அற்றவன் பதி அற்றவன்.

நிந்தனை சொல்லேல். 14520

(+ நீதியைக் கடைப்பிடி.)


நிமித்தம் பார்க்கிறவன் இரண்டகக்காரி மகன்; பொருத்தம் பார்க்கிறவன் பொல்லாங்கன் மகன்.

நிமிர்ந்தால் வானம்; குனிந்தால் பூமி.