பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

145



நிமிர்ந்து போட்டது என்ன? குனிந்து எடுத்தது என்ன?

நிமிஷ நேரம் நிற்கும் இன்பம் சிற்றின்பம்.

நிமிஷ நேரம் நீடிய இன்பம். 14525


நிமைப் பொழுதேனும் நில்லாது நீச உடல்.

நியாய சபைத் தீர்ப்பு, சேற்றில் நாட்டிய கம்பம் போல; மதில்மேற் பூனை போல.

நிர்வாண தேசத்தில் சீலை கட்டினவள் பைத்தியக்காரி.

நிர்வாண தேசத்தில் நீர்ச் சீலை கட்டினவன் பைத்தியக்காரன்.

(நிர்வாணப் பட்டணத்தில்.)

நிரக்ஷர குக்ஷி. 14530


நிருபன் ஆன போதே கருவம் மெத்த உண்டு.

நில்லாத காலடி நெடுந்தூரம் போகும்.

நில்லாது ஏதும்; நிலையே கல்வி.

நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் அழிய வேண்டும்.

(மடிய வேண்டும்.)

நிலத்து அளவே பயிர்; குலத்து அளவே குணம். 14535


நிலத்துக்கு ஏற்ற நீரும் குலத்துக்கு ஏற்ற சீரும்.

நிலத்துக்கு ஏற்ற விதை; குலத்துக்கு ஏற்ற பெண்.

நிலத்துக்குத் தகுந்த களியும் குலத்துக்குத் தகுந்த குணமும்.

(சனியும்.)

நிலத்தைப் பொறுத்து எரு விடு.

நிலம் ஓய்ந்து வாழ்க்கைப்பட முடியுமா? 14540


நிலம் கடக்கப் பாயலாமா?

நிலம் பொட்டல் அல்ல; தலைதான் பொட்டல்.

நிலவுக்கு ஒளித்துப் பரதேசம் போனதுபோல.

(அஞ்சி போகலாமா?)

நிலாக் காய்கிற இடமும் தெரியாது; நெல் விளைகிற பூமியும் தெரியாது.

நிலாப் புறப்பட எழுந்தானாம்; நெல்குழி வரைக்கும் நகர்ந்தானாம். 14545


நிலை இல்லான் வார்த்தை நீர்மேல் எழுத்து.

நிலை குலைந்தால் சீர் குலையும்.

நிலைமை தப்பியவனுக்கு நீதி.

நிலையாமை ஒன்றே நிலையானது.

நிலையிற் பிரியேல். 14550