பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தமிழ்ப் பழமொழிகள்

13


செருப்பால் அடித்துக் குதிரையோடு தீவட்டி பிடித்தாற்போல.

(தீவட்டி கொடுத்தாற் போல.)

செருப்பால் அடித்துப் பட்டுப் புடைவை கொடுத்தாற்போல.

செருப்பால் அடித்துப் பருப்புச் சோறு போட்டது போல. 11405


செருப்பின் அருமை வெயிலில் தெரியும்; நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.

செருப்புக் கடித்தால் திருப்பிக் கடிப்பதா?

செருப்புக்காகக் காலைக் குறைக்க முடியுமா?

(குதியைத் தறிக்கிறதா?)

செருப்புக் காலைக் கடித்தால் நாம் செருப்பைக் கடிப்பதா?

செருப்புக்கு அச்சாரம் துரும்பு. 11410


செருப்புக்குத் தகுந்தாற்போல் காலை வெட்டுவதா?

செருப்புப் போட்டவன் கூடவும் சந்நியாசி கூடவும் துணை போகாதே.

செருப்பு வைத்துச் சேவடி தொழுமாப் போலே.

செல் அரித்த காதுக்கு வெள்ளைக் கம்மல் ஏன்?

செல்லக் குடுக்கைத் தேங்காயே, பல் இடுக்கிலே புகுந்தாயே! 11415


செல்லச் சக்கிலிப் பிள்ளை செருப்புச் செருப்பாய்த் தின்று கழிகிறது.

செல்லச் சிறுக்கி அகமுடையான் செவ்வாய்க்கிழமை செத்தானாம்; வீடு வெறிச்சாய் போகுமென்று வெள்ளிக்கிழமை எடுத்தாளாம்.

செல்வத்தில் ஒரு பெண் பிறந்தது; செட்டித் தெரு எல்லாம் திரிந்து விட்டு வந்தது.

(அலைந்து விட்டு, நொட்டிவிட்டு.)

செல்லப் பிள்ளை; ஒன்றும் சொல்லப் புள்ளை.

(சொல்ல முடியவில்லை.)

செல்லப் பிள்ளை சீலை உடாதாம், பிள்ளை பெறுமட்டும். 11420


செல்லப் பிள்ளை செத்தாலும் சொல்லப் பிள்ளை சாகாது.

செல்லம் சறுக்காதா? வாசற்படி வழுக்காதா?

(சறுக்குதா? வழுக்குதா?)

செல்லம் சிரிப்பாணி, சீரங்கத்துத் குந்தாணி.

செல்லம் சீர் அழிக்கும்.

(அழியும்.)

செல்லம் சொல்லுக்கு அஞ்சாள்; அழகி நடைக்கு அஞ்சாள். 11425


செல்லம் சொல்லுக்கு அஞ்சுமா?

செல்லம் பரமண்டலத்தில் செல்லாது; எல்லா மண்டலமும் செல்லும்.