தமிழ்ப் பழமொழிகள்
149
நீட்டி நீட்டிப் பேசுகிற வேளாளப் பையா, உங்கள் துரைசாணி எங்கள் சிறைச்சாலையில் இருக்கிறான்.
நீட்டின விரலில் பாய்வது போல.
நீட்டு வித்தை ஏறாது.
- (ஏறுமா?)
நீண்ட கை குறுகாது.
- (+ சொத்திக்கை நீளாது.)
நீண்ட கை நெருப்பை அள்ளும். 14620
நீண்ட தச்சும் குறுகிய சொல்லும்.
- (தச்சனும்.. கொல்லனும்.)
நீண்ட பல்காரன் சிரித்தாலும் அழுவது போல் இருக்கும்.
நீண்ட புல் நிற்க நிழலாமா?
நீ தடுக்கிலே நுழைந்தால் நான் கோலத்திலே நுழைவேன்.
நீதி அற்ற பட்டணத்திலே நிறை மழை பெய்யுமா? 14625
நீதி இல்லா ஊருக்குப் போகிறதே வழி.
நீதி இல்லாத நாடு நிலவு இல்லாத முற்றம்.
நீதி கேளாமல் தலை வெட்டுவார்களா?
நீதிமான் தீவினை செய்யிற் பிழைப்பானா? நீதி இல்லாதவன் நீதி புரிந்தால் மரிப்பானா?
- (பீதி இல்லாதவன்.)
நீந்த அறியாதவனுக்கு வெள்ளம். 14630
நீந்த அறியாதவனை ஆறு இழுத்துப் போகும்.
- (கொண்டு போகும்.)
நீந்தத் தெரியாமல் குளத்தில் இறங்கமாட்டேன் என்றானாம்.
நீந்த மாட்டாத மாட்டை வெள்ளம் கொண்டு போகும்.
நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போகிறது.
நீ நட்சத்திரந்தான். 14635
- (நட்சத்திரம் - குரங்கு.)
நீ படித்த பள்ளியிலேதான் நானும் படித்தேன்.
நீ பிறர்க்கு உதவி செய்தால் தெய்வம் உனக்கு உதவி செய்யும்.
நீ போய் அலப்பிவிட்டு வராதே; நான் போய் உளறிவிட்டு வருகிறேன்.
நீயும் நானும் அடா, சாறும் சோறும் அடா.
நீயும் நானும் அடி, எதிரும் புதிரும் அடி. 14640