பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தமிழ்ப் பழமொழிகள்




நீர் அடித்தால் நீர் விலகுமா?

(விலகாது.)

நீர் அழியச் சீர் அழியும்.

நீர் அளவே ஆகுமாம் நீராம்பல்.

நீர் ஆழம் கண்டாலும் நேரிழையார் நெஞ்சாழம் காண முடியாது.

நீர் ஆனாலும் மோர்; பேய் ஆனாலும் தாய். 14645


நீர் இருக்க மோருக்கு என்ன குறை?

நீர் இல்லா நாடு நிலவு இல்லா முற்றம்.

நீர் இல்லா நாடும் சீர் இல்லா ஊரும்.

நீர் இல்லையானால் மீன் இல்லை.

நீர் உயர நெல் உயரும். 14650


உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.

(நீர் போனால் மீன் துள்ளுமா?)

நீர் என்று சொல்லி நெருப்பாய் முடிந்தது.

நீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?

நீர் என்று சொன்னால் நெருப்பு அவிவதும் சர்க்கரை என்று சொன்னால் அதனால் வாய் இனிப்பதும் உண்டா?

நீர் ஏற நெல் ஏறும் 14655


நீர் ஓட்டித்தில் தெப்பம் செல்வதைப் போல.

நீர்க்கடன் நிழற்கடன் கொடுத்து வைத்தமட்டும் இருக்கும்.

நீர்க்குள் பாசிபோல் வேர்க் கொள்ளாது.

(வெற்றி வேற்கை.)

நீர் கண்ட இடத்தில் சாப்பிடு; நிழல் கண்ட இடத்தில் படுத்து உறங்கு.

நீர்க்குமிழி போல. 14660


நீர்ச்சிலை இல்லை; நெடு முக்காடா?

நீர்ச்சோறு தின்று நிழலில் இருந்தால் மலடிக்கும் மசக்கை வரும்.

(நிழலில் படுத்தால்.)

நீர்ப்பாடு மெய்யானால் கெளபீனம் தாங்குமா?

(நீர்ப்பாண்டு.)

நீர்ப்பாம்பு கடித்தாலும் ரஸப்பட்டியாகும்.

நீர் பெருத்தால் நெல் சிறுக்கும். 14665


நீர் போனால் மீன் துள்ளுமா?

(துள்ளும்.)

நீர் மடையும் அம்பலமும் நின்றவனுக்கு உண்டு.

நீர்மேல் எழுத்துக்கு நிகர்.