தமிழ்ப் பழமொழிகள்
151
நீர்மேல் குமிழிபோல் நிலையில்லாக் காயம்.
நீர் மோருக்கும் கதியற்ற வீட்டிலே ஓமத்துக்கும் பசு நெய் கேட்டாற்போல. 14670
நீர் மோரும் சாதமும் நெடுநாளைக்கு இருந்தால் போதும்.
நீர் வளம் உண்டானால் நெல்வளம் உண்டாகும்.
நீர் வறண்டால் மீன் துள்ள மாட்டாது.
நீர் விளையாடேல்.
நீர் விற்ற காசு நீரோடு பேச்சு; மோர் விற்ற காசு மோரோடு போச்சு. 14675
நீர் வேலி கோப்பாய் நிலை செல்வம் ஆவார்.
- (யாழ்ப்பாண வழக்கு.)
நீரகம் பொருந்திய ஊரகத்திரு.
நீரளவே ஆகுமாம் நீராம்பல்.
நீராலே விலகினாய் நீ; நான் நெருப்பாலே விலகினேன்.
நீரில் இறங்கினால் தவளை கடிக்குமா? 14680
நீரில் எழுத்தாகும் யாக்கை.
- (நீதிநெறி விளக்கம்.)
நீரில் குமிழி இளமை.
- (நீதிநெறி விளக்கம்.)
நீரும் கொல்லும்; நெருப்பும் கொல்லும்.
நீரும் சோறும் தின்று நிழலில் படுத்தால் மலடிக்கும் மயக்கம் வரும்.
- (மசக்கை.)
நீரும் பாசியும் கலந்தாற் போல. 14685
நீரே பிராணாதாரம்.
நீரை அடித்தால் நீர் விலகுமா?
நீரை அடித்தால் வேறாகுமா?
நீரைக் கழுவி நிழலைப் புதைப்பது போல.
நீரைச் சிந்தினையோ? சீரைச் சிந்தினையோ? 14690
நீரைச் சுருக்கி மோரைப் பெருக்கு.
நீரைத் தொட்டாயோ, பாலைத் தொட்டாயோ?
நீரைத் தொட்டுத் தேனைத் தொட்டாற் போல.
நீரோடு வந்தது ஆற்றோடே போச்சு, பாலோடு வந்தது காலோடே வந்தது.
நீலம் கட்டுப்படப் பேசுகிறாள். 14695