பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153


நு


நுகத்துப் பகலாணி போல.

(பழமொழி நானூறு.)

நுங்கு தின்றவள் போகக் கூந்தல் நத்தியவன் அகப்பட்டது போல. 14705


நுட்பப் புத்திமான் திட்டச் சித்தனாவான்.

நுண்ணறிவுடையார் நண்ணுவார் புகழே.

நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.

நுண்ணிய ஞானம் உரைப்பார்கள்; சொன்னபடி ஒன்றும் நடவார்கள்.

(சொன்னதில்.)

நுண்பொருள் கொடுத்து நுண்ணியர் ஆவர். 14710


நுண்மை நுகரேல்.

நுணலும் தன் வாயாற் கெடும்.

(நாலடியார்.)

நுரை ஒத்ததுவே தரையில் பவிஷு.

நுரையைத் தின்றால் பசி போகாது.

(பசி போகுமா?)

நுழையாத வீடு இல்லை; அடிக்காத செருப்பு இல்லை. 14715


நுழை விட்டுச் செய், நூல் கற்று அடங்கு.

நுளையன் அறிவானா, ரத்தினத்தின் பெருமை?

நுளையன் பேச்சு அம்பலம் ஏறாது.

(அம்பலத்தில் ஏறுமா?)

நுனையிலே ஆசாரமா?

நுனிக்கொம்பில் ஏறி அடிக் கொம்பை வெட்டுவார்களா? 14720


நுனிப்புல் மேய்தல்.

(மேயந்தாற் போல.)

நுனி மரத்தில் இருந்து அடி மரத்தை வெட்டுபவன் போல்,

(மரத்தில் ஏறி.)

நுனியில் மேய்கிறது.