இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
153
நுகத்துப் பகலாணி போல.
- (பழமொழி நானூறு.)
நுங்கு தின்றவள் போகக் கூந்தல் நத்தியவன் அகப்பட்டது போல. 14705
நுட்பப் புத்திமான் திட்டச் சித்தனாவான்.
நுண்ணறிவுடையார் நண்ணுவார் புகழே.
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
நுண்ணிய ஞானம் உரைப்பார்கள்; சொன்னபடி ஒன்றும் நடவார்கள்.
- (சொன்னதில்.)
நுண்பொருள் கொடுத்து நுண்ணியர் ஆவர். 14710
நுண்மை நுகரேல்.
நுணலும் தன் வாயாற் கெடும்.
- (நாலடியார்.)
நுரை ஒத்ததுவே தரையில் பவிஷு.
நுரையைத் தின்றால் பசி போகாது.
- (பசி போகுமா?)
நுழையாத வீடு இல்லை; அடிக்காத செருப்பு இல்லை. 14715
நுழை விட்டுச் செய், நூல் கற்று அடங்கு.
நுளையன் அறிவானா, ரத்தினத்தின் பெருமை?
நுளையன் பேச்சு அம்பலம் ஏறாது.
- (அம்பலத்தில் ஏறுமா?)
நுனையிலே ஆசாரமா?
நுனிக்கொம்பில் ஏறி அடிக் கொம்பை வெட்டுவார்களா? 14720
நுனிப்புல் மேய்தல்.
- (மேயந்தாற் போல.)
நுனி மரத்தில் இருந்து அடி மரத்தை வெட்டுபவன் போல்,
- (மரத்தில் ஏறி.)
நுனியில் மேய்கிறது.