பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

157



நெய் உருக்கி மோர் பெருக்கி நீர் அருக்கிச் சாப்பிட வேண்டும்.

நெய்க் குடத்தில் எறும்பு மொய்த்தாற் போல.

நெய்க் குடத்தைத் தலையில் வைத்து எண்ணமிட்டவனைப் போல. 14780


நெய்க் குடம் உடைந்தால் நாய்க்கு விருந்து.

(வேட்டை.)

நெய்க்குத் தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா?

நெய்கிறதை விட்டு நினைத்துக் கொண்டானாம் கைக்கோளன்.

நெய்கிறவனுக்கு ஏன் குரங்குக்குட்டி?

நெய் நேத்திர வாயு; அன்னம் அதிக வாயு. 14785


நெய் முந்தியோ, திரி முந்தியோ?

நெய்யும் திரியும் போனால் நிற்குமா விளக்கு?

நெய்யும் நெருப்பும் சேர்ந்தாற் போல.

நெய்யை உருக்கித் தயிரைப் பெருக்கிச் சாப்பிட வேண்டும்.

நெய்வதை விட்டு நினைத்துக் கொண்டானாம் கைக்கோளன். 14790


நெய் வார்த்த கடன் நின்று வாங்கினாற் போல.

நெய் வார்த்த பணம் முழுகிப் போகிறதா?

நெய் வார்த்து உண்டது நெஞ்சு அறியாதா?

நெருக்க நட்டு நெல்லைப் பார்; கலக்க நட்டுக் கதிரைப் பார்.

நெருஞ்சி முள் தைத்தாலும் குனிந்தல்லவா பிடுங்க வேண்டும்? 14795

(ஆனாலும்.)


நெருஞ்சி முள்ளுக்குக் கோபம் வந்தால் கவட்டை மட்டுந்தானே?

நெருப்பால் வெந்த குழந்தை நெருப்பைப் பார்த்தால் பயப்படும்; சூடுண்ட பூனை அடுப்பங்கரை போகாது.

நெருப்பில் ஈ மொய்க்குமா?

(நெருப்பை.)

நெருப்பில் நெய் விட்டது போல.

நெருப்பில் பஞ்சு போட்டாற் போல. 14800


நெருப்பில் பட்ட மெழுகைப் போல.

நெருப்பில் புழுப் பற்றுமா?

நெருப்பில் போட்டாலும் நெஞ்சு வேகாது.

நெருப்பில் போட்டாலும் வேகுமா?

நெருப்பில் மெழுகைப் போட்டாற் போல. 14805