பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

தமிழ்ப் பழமொழிகள்



நெருப்பில் விழுந்த புழுப் போல.

(+ துடிக்கிறது.)

நெருப்பினும் பொல்லாச் செருப்பு.

நெருப்பினும் பொல்லாது கருப்பின் வாதை.

(கருப்பு-பஞ்சம்.)

நெருப்பு அருகில் செத்தை கிடந்த கதை.

நெருப்பு ஆறு, மயிர்ப்பாலம். 14810


நெருப்பு இருக்கிற காட்டை நம்பினாலும் நீர் இருக்கிற காட்டை நம்பக் கூடாது.

(நாட்டை.)

நெருப்பு இல்லாமல் நீள் புகை எழுமா?

நெருப்பு இல்லாமல் புகை கிளம்பாது.

நெருப்பு என்றால் வாய் சுடுமா?

நெருப்பு என்றால் வீடு வெந்து போகுமா? 14815


நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து விடாது.

நெருப்புக்கு ஈரம் உண்டா?

நெருப்புக்குத் தீட்டு இல்லை; எச்சிலும் இல்லை.

நெருப்புககு நீர் பகை.

நெருப்புச் சிறிது எனறு முன்றானையில் முடியலாமா? 14820


நெருப்புச் சுட்டு உமிக் காந்தலில் விழுந்தது போல.

நெருப்பு நிறை காட்டில் ஏதாவது நிற்கும்; நீர் நின்ற காட்டில் ஒன்றும் நிற்காது.

நெருப்புப் பந்தம் கட்டிக் கொண்டு நிற்கிறான்.

நெருப்புப் பந்தலிலே மெழுகுப் பொம்மை ஆடுமா?

நெருப்பும் சரி; பகையும் சரி. 14825


நெருப்பு ஜ்வாலையில் தண்ணீர் விட்டு அணைத்தது போல.

நெருப்பை அறியாமல் தொட்டாலும் சுடும்.

நெருப்பை ஈ மொய்க்குமா?

நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும்; காணாமல் மிதித்தாலும் சுடும்.

நெருப்பைச் சார்ந்த யாவும் அதன் நிறம் ஆகும். 14830


நெருப்பைச் சிறிது என்று நினைக்கலாமா?

நெருப்பைச் செல் அரிக்குமா?

நெருப்பைத் தலைகீழாய்ப் பிடித்தாலும் அதன் ஜ்வாலை கீழ் நோக்குமா?