பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தமிழ்ப் பழமொழிகள்



நெல்லோடு பதரும் உண்டு.

நெல்வகை எண்ணினாலும் பள்ளுவகை எண்ண முடியாது.

நெல் விளைந்த பூமியும் அறியாய்: நிலா எறித்த முற்றமும் அறியாய்.

(நிலமும் தெரியாது; நிலாக் காய்கிற இடமும் தெரியாது.)

நெல் வேர் இடப் புல் வேர் அறும்.

நெற் செய்யப் புல் தேய்ந்தாற் போல. 14865

(பழமொழி நானூறு.)


நெற்பயிர் செய்யின் பிற்பயிர் விளையும்.

நெற்றிக் கண் காட்டினாலும் குற்றம் குற்றமே.

(நக்கீரர் கூற்று: திருவால. 16.27)

நெற்றிக்குப் புருவம் தூரமா?

நெற்றியில் கண்.

நெற்றியில் கண் படைத்தவனா? 14870


நெற்றியில் மூன்று கண் படைத்தவன் வரவேண்டும்.

நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைத்தான்.

நெறி தப்புவார்க்கு அறிவிப்பது வீண்.