இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
160
தமிழ்ப் பழமொழிகள்
நெல்லோடு பதரும் உண்டு.
நெல்வகை எண்ணினாலும் பள்ளுவகை எண்ண முடியாது.
நெல் விளைந்த பூமியும் அறியாய்: நிலா எறித்த முற்றமும் அறியாய்.
- (நிலமும் தெரியாது; நிலாக் காய்கிற இடமும் தெரியாது.)
நெல் வேர் இடப் புல் வேர் அறும்.
நெற் செய்யப் புல் தேய்ந்தாற் போல. 14865
- (பழமொழி நானூறு.)
நெற்பயிர் செய்யின் பிற்பயிர் விளையும்.
நெற்றிக் கண் காட்டினாலும் குற்றம் குற்றமே.
- (நக்கீரர் கூற்று: திருவால. 16.27)
நெற்றிக்குப் புருவம் தூரமா?
நெற்றியில் கண்.
நெற்றியில் கண் படைத்தவனா? 14870
நெற்றியில் மூன்று கண் படைத்தவன் வரவேண்டும்.
நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைத்தான்.
நெறி தப்புவார்க்கு அறிவிப்பது வீண்.