பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்




நே


நேசம் உள்ளளர் வார்த்தை நெல்லிக்கனி தின்றது போல.

நேசமும் பாசமும் நேசனுக்கு உண்டு. 14875


நேத்திர மணியே சூத்திர அணியே.

நேயமே நிற்கும்.

நேர் உத்தரம் சென்மப் பழி.

நேர்ந்து நேர்ந்து சொன்னாலும் நீசக் கசடர் வாசமாகார்.

நேர்பட ஒழுகு. 14880


நேர்மை இல்லா மந்திரியும் நீதி இல்லா அரசும் பாழ்.

நேர்மை உண்டானால் நீர்மையும் உண்டு.

நேர்வழி நெடுக இருக்கக் கோணல் வழி குறுக்கே வந்ததாம்.

நேரா நோன்பு சீர் ஆகாது.

நேருக்கு நேர் சொன்னாலும் கூர் கெட்டவனுக்கு உறைக்காது. 14885


நேரும் சீருமாக.

நேரும் சீருமாய்ப் போக வேண்டும்.

நேரே போனால் எதிரும் புதிரும்.

( : சொந்தம் என்னவென்றால் சொல்லும் வழக்கம்.)

நேற்று இருந்தவனை இன்றைக்குக் காணோம்.

நேற்று உள்ளார் இன்று மாண்டார். 14890


நேற்றுப் பிறந்த நாய்க்கு வந்த பசியைப் பார்.

நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்.

நேற்று வந்த மொட்டைச்சி நெய் வார்த்து உண்ணச் சிணுங்குகிறாள்.

நேற்று வந்தாளாம் குடி; அவள் தலைமேல் விழுந்ததாம் இடி.

நேற்று வெட்டின கிணற்றில் முந்தா நாள் முதலை புறப்பட்டதாம். 14895

(குளத்தில், முந்தாநாள் வந்த முதலை.)


நேற்றே நெருப்பு அணைந்துவிட்டது என்பாளே அவள்.