பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162




நை


நைடதம் புலவர்க்கு ஒளடதம்.

நைபவர் எனினும் நொய்ய உரையேல்.

(நையவா.)

நையக் கற்கினும் நொய்ய நன்குரை.

நையப் புடைத்தாலும் நாய் நன்றி மறவாது. 14900


நைவினை நணுகேல்.


நொ


நொடிக்கு நூறு கவி.

நொடிக்கு நூறு குற்ற நொடிக்கு நூறு வசனம் சொல்வாள்.

நொடிப் போதும் வீண் கடேல். 14905


நொண்டி ஆயக்காரன் கண்டு மிரட்டுகிறது போல.

நொண்டி ஆனைக்கு நூறு குறும்பு.

நொண்டி ஆனை நொடியில் அழிக்கும்.

நொண்டிக் கழுதைக்குச் சறுக்கினது சரக்கு.

நொண்டிக்கு உண்டு நூற்றெட்டுக் கிறுக்கு. 14915

(நூறு கிறுக்கு.)