பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164




நோ


கத்துக்கு ஒதுங்கு.

நோக்க நோக்குவ, நோக்காமுன் நோக்குவான்.

நோகாது உணர்வோர் கல்வியை நோற்பார்.

நோகாமல் அடிக்கிறேன்; ஓயாமல் அழு.

(அடித்தேன், அழுதான்.)

நோஞ்சல் பூனை மத்தை நக்குகிறது போல. 14950


நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

நோய் அற்ற வாழ்வே வாழ்வு; குறைவற்ற செல்வமே செல்வம்,

நோய் ஒரு பக்கம்; சூடு ஒரு பக்கமா?

நோய்க்கு இடம் கொடேல்.

நோய்க்கும் பார்; பேய்க்கும் பார். 14955


நோய் கண்டார் பேய் கண்டார்.

(கொண்டார்.)

நோய் கொண்டால் பார்ப்பாரும் தின்பார் உடும்பு.

(பழமொழி நானூறு.)

நோய் தீர்ந்தபின் வைத்தியனை மதிக்கமாட்டார்.

நோய்ந்த புலியானாலும் மாட்டுக்கு வலிது.

(நோய் பிடித்த.)

நோய்ப்புலி ஆகிலும் மாட்டுக்கு வல்லது. 14960


நோய் பிடித்த கோழி போலத் தூங்கி வழிகிறான்.

நோய் போக்குவது நோன்பு; பேய் போக்குவது இரும்பு.

(வேம்பு)

நோயாளிக்கு ஆசை வார்த்தை சொன்னாற் போல,

நோயாளிக்குத் தெரியும் நோயின் வருத்தம்.

நோயாளி தலைமாட்டில் பரிகாரி இருந்து அழுதாற் போல. 14965

(பரிகாரி-வைத்தியன்.)


நோயாளி விதியாளி ஆனால் பரிகாரி பேதாளி ஆவான்,

(விழியாளி.)