இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ப் பழமொழிகள்
165
நோயைக் கண்ட மனிதன் போல்; நாயைக் கண்ட திருடன் போல்.
நோயோடு நூற்றாண்டு.
நோயோ, பேயோ?
நோலா நோன்பு சீர் ஆகாது. 14970
நோலாமையினால் மேலானது போம்.
நோவு ஒரு பக்கம் இருக்கச் சூடு ஒரு பக்கம் போட்டாற் போல.
நோவு ஒன்று இருக்க, மருந்து ஒன்று கொடுத்தது போல.
நோவு காடு எறிப் போச்சு.
நோன்பு என்பது கொன்று தின்னாமை. 14975
நௌவித் தொழில் நாசம்.
நௌவியில்தானே கல்வியறிவைக் கல்.
நௌவியும் முதுமையும் நடுவும் அற்றவன்.
நௌவியும் வாழ்க்கையும் அழகு அல்ல. நற்குணம் ஒன்றே அழகு.