166
பக்கச் சொல் பதினாயிரம்.
14980
பக்குவம் தெரிந்தால் பல்லக்கு ஏறலாம்.
பக்தர் உளத்தில் ஈசன் குடியிருப்பான்.
பக்தி இருந்தால் முக்தி கிடைக்கும்.
பக்தி இல்லாச் சங்கீதம் பாடுவதேன்? சக்தி இல்லாவிட்டால் சிவனே என்று இரு.
பக்தி இல்லாப் புத்தி அசேதனம். 14985
பக்தி இல்லாப் பூசை போல.
பக்தி இல்லாப் பூனை பரமண்டலத்துக்கு ஏறுமா?
பக்தி இல்லாப் பூனை பரமண்டலத்துக்குப் போயிற்றாம், நெத்திலி மீனை வாயிலே கல்விக் கொண்டு.
பக்தி உண்டானால் முக்தி உண்டாம்.
பக்தி உள்ள பூனை பரலோகம் போகிறபோது, கச்சைக் கருவாட்டைக் கட்கத்திலே இடுக்கிக் கொண்டு போயிற்றாம். 14990
பக்தி உள்ளவனுக்குப் புட்டுக் கூடை அண்டம் புறப்பட்டுப் போயிற்றா?
பக்திக்கும் சிரத்தைக்கும் பகவான் பலன் கொடுப்பான்.
பக்தி கொள்பவன் முக்தி உள்ளவன்,
பக்தி படபட, யானை சட்டி லொட லொட.
பக்தியோடே பாகற்காய் சட்டியோடே தீய்கிறது. 14995
பகட்டிப் பங்கு எடுத்தால் என்ன? இடியடி பொரியரிசி.
பகடிக்குப் பத்துப் பணம் கொடுப்பார்; திருப்பாட்டுக்கு ஒரு காசும் கொடார்.
- (பத்துக் காசு ஒரு காசு.)
பகடியைப் பாம்பு கடித்தது போல.
பகல் உண்ணான் பருத்திருப்பான்.
பகல் உணவுக்குப் பாகல், 15000
பகல் கனவாய் முடிந்தது.
பகலில் தோட்டக்காரன்; இரவில் பிச்சைக்காரன்.