பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

167



பகலில் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுவும் பேசாதே.

பகலில் பசுமாடு தெரியாதவனுக்கு இரவில் எருமை மாடு தெரியுமா?

பகலில் பன்றி வேட்டைக்கு அஞ்சும் நாய், இரவில் கரித்துண்டுக்கு அஞ்சும். 15005


பகலை இருள் விழுங்குமா?

பகற் கனாப் போல,

பகிடியைப் பாம்பு கடித்தது போல,

(பகடியை.)

பகிர்ந்து தின்றால் பசி ஆறும்.

பகுத்தறிவு இல்லாத துணிவு, பாரம் இல்லாத கப்பல். 15010

(பகுத்தல் இல்லாத.)


பகுத்து அறியாமல் துணியாதே; படபடப்பாகப் பேசாதே.

(செய்யாதே.)

பகுஜன வாக்யம் கர்த்தவ்யம்,

பகைக்கச் செய்யேல்; மறு ஜனனப்படு.

பகைத்தவர் சொல்லாதது இல்லை; பசித்தவர் தின்னாதது இல்லை.

பகைத்தவன் பாட்டைப் பகலில் கேள், 15015


பகைத்தால் உறவு இல்லை.

பகையாளிக்குப் பருப்பிலே நெய் விட்டது போல.

பகையாளி குடியை உறவாடிக் கெடு.

பகையாளி குடியைக் கெடுக்க வெங்காயக் குழி போடச் சொன்னது போல.

(பங்காளி குடியை.)

பகையும் உறவும் பணம் பக்குவம். 15020


பகைவர் உறவு புகை எழா நெருப்பு.

(எழு நெருப்பு.)

பகைவரிடம் நல்ல வார்த்தை சொன்னால் பொல்லாப்பு இல்லை.

பகைவன் இல்லாத ஊரில் குடி இருக்காதே.

பங்கறை சாவானுக்குப் பல்லழகைப் பார்.

(பதங்குறைந்த.)

பங்கன் இருக்குமிடத்தைத் தேடிக் கங்கை வந்தது போல. 15025

(பங்கன்-நொண்டி.)