தமிழ்ப் பழமொழிகள்
15
செல்வமே ஜீவாதாரம்.
செல்வர் எழுந்தருள்வது காலக்ஷேபத்துக்கு விரோதம்.
- (சீரங்கத்தில்.)
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல். 11455
செல்வன் சொல்லுக்கு அஞ்சான்; வீரன் போருக்கு அஞ்சான்.
செலவில் குறைந்த வரவானால் சேமிப்பது எப்படி?
- (சேமப்படுகிறது.)
செலவு அதிகம்; வரவு போதாது.
செலவு இல்லாச் செலவு வந்தால் களவு இல்லாக் களவு வரும்.
செலவு இல்லாத சிங்காரம் போல. 11460
செலவு இல்லாப் பணத்துக்குச் சில்லறைக் கடை வைத்துப் பார்த்தானாம்.
செலவு உண்டானால் சேவகம் உண்டு.
செலவோடு செலவு, கந்தப் பொடிக்குக் காற்பணம்.
செவ்வாய் நட்டுப் புதன் அறுக்கல் ஆகாது.
செவ்வாய் புதன் வடக்கே சூலம். 11465
செவ்வாய் வெள்ளி செலவிடாதே.
செவ்வாயோ? வெறுவாயோ?
செவிட்டில் அடித்தால் ராகம் போட்டு அழத் தெரியாது.
- (செவிடு - கன்னம்.)
செவிட்டில் அறைந்தாலும் தேம்பி அழத் தெரியாது.
செவிட்டுக்குச் சூன்யம்; அசட்டுக்கு ஆங்காரம். 11470
செவிடன் காதிலே சங்கு ஊதின மாதிரி.
- (செவிடன் முன்னே.)
செவிடன் பாட்டுக் கேட்கப் போனது போல்.
செவிடன் பாட்டுக் கேட்ட சம்பந்தம்.
செவிடனும் குருடனும் கூத்துப் பார்த்தாற் போல.
செவிடு இருந்தால் ஊமை இருக்கும். 11475
செழிப்புக்குத் தேன் குருவி.
சென்மக் குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது.
சென்மக் குருடனுக்குக் கண் கிடைத்தது போல.