பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

169



பச்சைக் குழந்தைக்கு எத்தத் தெரியும்.

பச்சைக் கூட்டோடே கைலாயம் சேர்வாய்,

பச்சை கண்டால் ஒட்டடி மகளே. 15055


பச்சை கொடுத்தால் பாவம் தீரும்; வெள்ளை கொடுத்தால் வினை தீரும்;

பச்சைச் சிரிப்புப் பல்லுக்குக் கேடு; தூவு பருக்கை வயிற்றுக்குக் கேடு.

பச்சைத் தண்ணீரிலே விளக்குக் கொடுத்துப் படா பத்தினித் தாயே; பெண்டாண்டவனே, உன்னைத் தொட்டவர்கள் எத்தனை பேரடி? துலுக்குப் பத்தினித் தாயே.

பச்சை நெல்லுக்கு பறையனிடத்தில் சேவிக்கலாம்.

பச்சைப் பாண்டத்தில் பாலை வைத்தால் பாலும் உதவாது; பாண்டமும் உதவாது. 15060


பச்சைப் புண்ணில் ஊசி எடுத்துக் குத்தினது போல.

பச்சை பாதி புழுங்கல் பாதி,

பச்சை மட்டைக்குப் போனவன் பதினெட்டாந் துக்கத்துக்கு வந்தாற் போல.

(வந்தானாம்.)

பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டுமா?

பச்சை மரத்தில் ஆணி அடித்தது போல. 15065


பச்சை மரத்துக்கு இத்தனை என்றால் பட்ட மரத்துக்கு எத்தனை?

பச்சை மரம் படப் பார்ப்பான்.

பச்சை மீனைப் பட்டிலே பொதித்து வை.

பச்சையைக் கண்டால் ஒட்டடி மகளே,

பசங்கள் கஷ்டம் பத்து வருஷம். 15070


பசி இல்லாதவனுக்குக் கருப்பு மயிர் மாத்திரம்.

(கருப்பு-பஞ்சம்;மயிருக்குச் சமானம்.)

பசி உள்ளவன் ருசி அறியான்.

(உடையான்.)

பசி உற்ற நேரத்தில் இல்லாத பால் பழம் பசி அற்ற நேரத்தில் ஏன்?

பசி ஏப்பக்காரனுக்கும் புளி ஏப்பக்காரனுக்கும் வித்தியாசம் இல்லையா?

பசி ஏப்பக்காரனும் புளி ஏப்பக்காரனும் கூட்டுப் பயிர் இட்டாற் போல. 15075