பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தமிழ்ப் பழமொழிகள்



பசி ஏப்பமா? புளி ஏப்பமா?

பசிக்குக் கறி வேண்டாம்; தூக்கத்துக்குப் பாய் வேண்டாம்.

பசிக்குப் பனம் பழம் தின்னால் பித்தம் பட்ட பாடு படட்டும்.

(படுத்துகிற பாடு படுத்தட்டும்).

பசிக்குப் பனம் பழம் தின்றால் பித்தம் போகும் இடத்துக்குப் போகும்.

பசிக்குப் பனம் பழம் தின்றால் பின்னால் பட்டபாடு படலாம். 15080

(பித்தம் பட்ட பாடு படலாம்.)


பசிக்குப் பனம் பழமும் ருசிக்கும்.

பசிக்குமுன் பத்தும் பறக்கும்.

பசித்த கணக்கன் பழங்கணக்குப் பார்த்ததுபோல.

பசித்த செட்டி பாக்கைத் தின்றானாம்.

பசித்த பறையனும் குளித்த சைவனும் சாப்பிடாது இரார். 15085


பசித்தவன் தின்னாததும் இல்லை; பகைத்தவன் சொல்லாததும் இல்லை.

பசித்தவன் பயிற்றை விதை; இளைத்தவன் என்னை விதை.

பசித்தவன் பழங்கணக்கைப் பார்த்தது போல.

பசித்தவன் மேல் நம்பிக்கை வைக்கலாமா?

(வையாதே.)

பசித்தவனுக்குப் பால் அன்னம் இட்டாற் போல. 15090


பசித்த வீட்டில் பச்சை நாவி சேராது.

பசித்தார் பொழுதும் போம்; பாலுடனே அன்னம் புசித்தால் பொழுதும் போம்.

பசித்தால் ௫சி இல்லை. பசித்துப் புசி.

பசித்து வந்து பானையைப் பார்க்காமல், குளித்து வந்து கொடியைப் பார்க்காமல். 15095


பசித்து வருவோர் கையிலே பரிந்து அமிர்தம் ஈந்தாற் போல.

பசித்தோர் முகம் பார்.

பசி தீர்ந்தால் பாட்டும் இன்பமாம்.

(இன்பமயம்.)

பசி பசி என்று பழையதில் கை விட்டாளாம்.

பசியாத போது புசியாதே. 15100


பசியாமல் இருக்க மருந்து கொடுக்கிறேன்; பழையது இருந்தால் போடு என்பது போல.

(பழங்கஞ்சி இருந்தால், ஒருகை போடு.)