172
தமிழ்ப் பழமொழிகள்
பசு மரத்தில் அறைந்த ஆணி போல.
- (தைத்த.)
பசுமாடு நொண்டியானால் பாலும் நொண்டியா?
பசுமாடும் எருமை மாடும் ஒன்று ஆகுமா?
பசுவன் பிடிக்கப் போய்க் குரங்கானாற் போல.
பசுவில் ஏழை, பார்ப்பானில் ஏழை. 15135
பசுவில் மோழையும் இல்லை; பார்ப்பானில் ஏழையும் இல்லை.
- (மோழையையும்... ஏழையையும் நம்பாதே.)
பசு விழுந்தது புலிக்கு ஆதாயம்.
பசுவிலே சாதுவையும் பார்ப்பானிலே ஏழையையும் நம்பக்கூடாது.
பசுவின் உரத்திலும் பழம் புழுதி மேல்.
பசுவின் வயிற்றில்தான் கோரோசனை பிறக்கிறது. 15140
பசுவுக்கு இரை கொடுத்தால் மதுரமான பால் கொடுக்கும்.
பசுவுக்குத் தண்ணீர் பத்துப் புண்ணியம்.
பசுவுக்குப் பிரசவ வேதனை; காளைக்குக் காம வேதனை.
பசுவும் பசுவும் பாய்ச்சலுக்கு நிற்க, நடுப்புல் தேய்ந்தாற்போல.
பசுவும் புலியும் பரிந்து ஒரு துறையில் நீர் உண்கின்றன. 15145
பசுவைக் கொன்றால் கன்று பிழைக்குமா?
பசுவைக் கொன்று செருப்புத்தானம் செய்ததுபோல.
பசுவைப் போல் இரு; புலியைப் போல் பாய்.
பசுவை விற்றால் கன்றுக்கு வழக்கா?
- (வழக்கு எது?)
பசையைக் கண்டால் ஒட்டடி மகளே. 15150
பஞ்சத்தில் அடிபட்ட மாடு கம்பங் கொல்லையிற் புகுந்தாற்போல.
பஞ்சத்தில் அடிபட்டவன் போல.
பஞ்சத்தில் பிள்ளை விற்றது போல.
பஞ்சத்துக்கு இருந்து பிழை; படைக்கு ஓடிப் பிழை.
பஞ்சத்துக்கு மழை பனி போல. 15155
பஞ்சபாண்டவர் என்றால் தெரியாதா, கட்டில் சாலைப்போல் மூன்று பேர் என்று இரண்டு விரல் காட்டி ஒரு கோடு எழுதினாள்.
- (எழுது.)
பஞ்சம் இல்லாக் காலத்தில் பசி பறக்கும்.
பஞ்சம் தீரும்போது கொல்லும்.