பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

173



பஞ்சம் பணியாரம் சுட்டது; வீங்கல் வெறிக்க வெறிக்கப் பார்க்கிறது.

பஞ்சம் போம்; பஞ்சத்தில் பட்ட வசை போகாது. 15160


பஞ்சம் போம்; பழி நிற்கும்.

பஞ்சம் வந்தாலும் பரதேசம் போகாதே,

பஞ்சமே வந்தாலும் நெஞ்சமே அஞ்சாதே.

பஞ்சாங்கக் காரன் மனைவி வெற்றிலை போடுகிறது போல.

பஞ்சாங்கக் காரன் வீட்டில் சாப்பாடு நடக்கிற வேளை. 15165


பஞ்சாங்கம் கிழிந்தாலும் நட்சத்திரம் அழியாது.

பஞ்சாங்கம் கெட்டுப் போனாலும் நவக்கிரகம் கெட்டுப் போகுமா?

பஞ்சாங்கம் பல சாத்திரம்; கஞ்சி குடித்தால் கல மூத்திரம்.

பஞ்சாங்கம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.

பஞ்சாங்கம் போனால் அமாவாசையும் போய்விடுமா? 15170


பஞ்சாங்கம் போனாலும் நட்சத்திரம் போகாது.

பஞ்சானும் குஞ்சானும் பறக்கத் தவிக்கின்றன.

பஞ்சு கயிறானாலும் பாரம் தாங்கும்.

பஞ்சுப் பொதியில் நெருப்புப் பட்டாற் போல.

பஞ்சுப் பொதியில் பட்ட அம்பு போல. 15175

(நைத்த.)


பஞ்சு பட்ட பாடு போல.

பஞ்சு படாப் பாடு படும்.

பஞ்சு படிந்த பழஞ்சித்திரம் போல.

பஞ்சு பறந்தாலும் படியும், ஒரு தேசம்; நெஞ்சு பறப்பதற்கு ஒரு நிலை காணோம் லவலேசம்.

(பஞ்சு படிந்தாலும்.)

பஞ்சு போலப் பறக்கிறேன் 15180


பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?

பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தாற் போல

பஞ்சும் நெருப்பும் போல.

பஞ்சை நாரி பலகாரம் சுட்டாள்; வீங்கி நாரி விசாரப்பட்டாள்.

(பணியாரம் சுட்டதும்...விசாரப்பட்டதும்.)

பட்சத்துக்குக் கண் இல்லை. 15185