பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தமிழ்ப் பழமொழிகள்



பட்சிக்குப் பசித்தாலும் எட்டியைத் தின்னாது.

(எட்டிக் கனியை)

பட்சி சிறகு பறி கொடுத்தாற் போல.

பட்சித்தாலும் அவர் சித்தம்; ரட்சித்தாலும் சித்தம்.

பட்சி மாறி விட்டது. 15190


பட்ட இடம் பொழுது; விட்ட இடம் விடுதி.

பட்ட கடனுக்குக் கொட்டை நூற்று அடைத்தாளாம்.

பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்.

பட்ட குணம் சுட்டாலும் போகாது.

(திருவால வாயுடையார் திருவிளையாடற் புாரணம், 34.6.)

பட்டடையோடு நின்று தின்ற மாட்டுக்குக் கட்டி வைத்துப் போடக் கட்டுமா? 15195

(யாழ்ப்பாண வழக்கு.)


பட்டணத்தாள் பெற்ற குட்டி; பணம் பறிக்க வல்ல குட்டி.

பட்டணத்துக் காசு பாலாறு தாண்டாது.

பட்டணத்து நரியைப் பனங்காட்டு நரி ஏய்த்ததாம்.

பட்டணத்துப் பெண் தட்டுவாணி; பட்டிக் காட்டுப் பெண் ருக்மிணி.

பட்டணத்து வாசலைப் பட்டாலே மூடியிருக்கிறதோ? 15200

(படலாலே, படலாலே மூடுகிறதா?)


பட்டணத்தைப் படல் கட்டிச் சாத்தலாமா?

(காக்க முடியுமா?)

பட்டணம் பறி போகிறது.

பட்டத்து ஆனை பல்லக்குக்குப் பின்னே வருமா?

பட்டத்து ஆனை பவனி வந்தாற் போல.

பட்டத்து ஆனையைப் பார்த்துக் காட்டானை சிரித்ததாம். 15205


பட்டது எல்லாம் பாடு; நட்டது எல்லாம் சாவி.

(பட்டதும் பாழாச்சு; நட்டதும் சாவி ஆச்சு)

பட்டது கெட்டது எல்லாம் பக்கத்தில் பக்கத்தில் வைத்து விட்டுப் புட்டுக் கூடையை ஏந்திக் கொண்டாள் பூப்பறிக்க.

பட்டதும் கெட்டதும் பாய் முடைந்து விற்றதும் ஓலை முடையாமல் உட்கார்ந்திருந்ததும்.

பட்டப் பகல் போல,

பட்டப் பகல் போல் நிலவு எறிக்கக் குட்டிச்சுவரிலே முட்டிக் கொள்ள என்ன வெள்ளெழுத்தா? 15210