பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

175



பட்டப் பகல் விளக்குப் பாழடைந்தாற் போல.

(பழுதடைந்தாற் போல)

பட்டப் பகலில் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்வதா?

பட்டப் பகலில் நட்சத்திரம் கண்டாற் போல.

பட்டப் பகலில் பட்டணம் கொள்ளை போச்சாம்.

(பறிபோச்சாம்.)

பட்டப் பகலில் டோகிறவளுக்குத் தட்டுக் கூடை மறைப்பா? 15215

(போகிற தேவடியாளுக்கு மறைப்பு ஏன்?)


பட்டப் பகலைப் போல நிலா எறிக்கக் குட்டிச் சுவரிலே முட்டிக் கொள்ள வெள்ளெழுத்தா?

பட்ட பாட்டிலும் பெருத்த பாடாக,

பட்ட பாட்டுக்குப் பலன் கைமேலே.

பட்ட பாடும் கெட்ட கேடும்.

பட்டம் அறிந்து பயிர் இடு. 15220


பட்டம் கட்டின குதிரைக்கு லட்சணம் பார்ப்பதுண்டா?

பட்டம் தப்பினால் நட்டம்

பட்ட மரம் காற்றுக்கு அஞ்சாது.

பட்ட ருணம் சுட்டாலும் தீராது.

(ருணம்-கடன்.)

பட்டர் வீட்டில் பாவம் படுத்திருக்கும். 15225


பட்டவர்க்கு உண்டு பலன்.

பட்டவர்க்குப் பதவி உண்டு.

பட்டவர்கள் பதத்தில் இருப்பார்கள்.

பட்டவளுக்குப் பதவி; படாதவளுக்கு நரகம். 15230

பட்டவளுக்குப் பலன் உண்டு; பதவியும் உண்டு.

பட்டவனுக்குத் தெரியும் படையிற் கலக்கம்.

பட்டறை போட்ட பிறகு குறியோடுவது போல.

பட்டறை வாய்த்தால் பணி வாய்க்கும்.

பட்டா உன் பேரில்; சாகுபடி என் பேரில்,

(என் ஊரிலே.)

பட்டா ஒருவர் பேரில்; அநுபவம் ஒருவருக்கு. 15235


பட்டா ஒருவன் மேல்; பயிர்ச் செலவு ஒருவர் மேல்.

பட்டாடை வாய்த்தால் பணி வாய்க்கும்,

பட்டால் அறிவான் சண்டாளன்; மழை பெய்தால் அறிவான் வேளாளன்.