பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

தமிழ்ப் பழமொழிகள்



பணக்கேடு ஆனாலும் குணக்கேடு ஆகாது.

பணத்துக்கு ஓர் அம்பு கொண்டு பாழில் எய்கிறது போல.

(பாழுக்கு எய்கிறதா? பாழுக்கு இறைத்தது போல.)

பணத்துக்குப் பயறு பத்துப்படி; உறவுக்குப் பயறு ஒன்பது படி. 15380


பணத்துக்குப் பெயர் ஆட்கொல்லி.

பணத்தைக் கொடுக்கச் சொல்லி உயிரை வாங்குகிறது.

பணத்தைக் கொடுத்தானாம்; காட்டைக் கேட்டானாம்.

பணத்தைக் கொடுத்துப் பணியாரத்தை வாங்கிப் பற்றைக்குள்ளே இருந்து தின்ன வேண்டுமோ?

பணத்தைக் கொடுத்துப் பழந் தொழி வாங்கு. 15385


பணத்தைப் பார்க்கிறதா? பழமையைப் பார்க்கிறதா?

பணந்தான் குலம்; பசிதான் கறி,

பணம் அற்றால் உறவு இல்லை; பசி அற்றால் ருசி இல்லை.

பணம் இருக்க வேணும்; இல்லா விட்டால் பத்து ஜனம் இருக்க வேணும்.

பணம் இருந்தால் பாட்சா; இல்லா விட்டால் பக்கிரி. 15390

(பாதுஷா.)


பணம் இல்லாதவன் பிணம்.

பணம் உண்டானால் படையையும் வெல்வான்.

பணம் உண்டானால் மணம் உண்டு.

(மனம்.)

பணம் என்றால் பிணமும் கை தூக்கும்.

(எழுந்திருக்கும்.)

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும. 15395


பணம் என்றால் பேயாய்ப் பறக்கிறான்.

(பறக்கிறது.)

பணம் என்ன செய்யும்? பத்து விதம் செய்யும்.

(பத்து வகை.)

பணம் என்ன பாஷாணம்; குணம் ஒன்றே போதும்.

பணம் கண்ட தேவடியாள் பாயிலே படுக்க மாட்டாள்.

பணம் குணம் ஆகும்; பசி கறி ஆகும். 15400


பணம் செல்லா விட்டால் அரிசிக்காரிக்கு என்ன?

பணம் பசியைப் போக்காது

பணம் பணந்தோடே சேரும்; இனம் இனத்தோடே சேரும்,