182
தமிழ்ப் பழமொழிகள்
பணக்கேடு ஆனாலும் குணக்கேடு ஆகாது.
பணத்துக்கு ஓர் அம்பு கொண்டு பாழில் எய்கிறது போல.
- (பாழுக்கு எய்கிறதா? பாழுக்கு இறைத்தது போல.)
பணத்துக்குப் பயறு பத்துப்படி; உறவுக்குப் பயறு ஒன்பது படி. 15380
பணத்துக்குப் பெயர் ஆட்கொல்லி.
பணத்தைக் கொடுக்கச் சொல்லி உயிரை வாங்குகிறது.
பணத்தைக் கொடுத்தானாம்; காட்டைக் கேட்டானாம்.
பணத்தைக் கொடுத்துப் பணியாரத்தை வாங்கிப் பற்றைக்குள்ளே இருந்து தின்ன வேண்டுமோ?
பணத்தைக் கொடுத்துப் பழந் தொழி வாங்கு. 15385
பணத்தைப் பார்க்கிறதா? பழமையைப் பார்க்கிறதா?
பணந்தான் குலம்; பசிதான் கறி,
பணம் அற்றால் உறவு இல்லை; பசி அற்றால் ருசி இல்லை.
பணம் இருக்க வேணும்; இல்லா விட்டால் பத்து ஜனம் இருக்க வேணும்.
பணம் இருந்தால் பாட்சா; இல்லா விட்டால் பக்கிரி. 15390
- (பாதுஷா.)
பணம் இல்லாதவன் பிணம்.
பணம் உண்டானால் படையையும் வெல்வான்.
பணம் உண்டானால் மணம் உண்டு.
- (மனம்.)
பணம் என்றால் பிணமும் கை தூக்கும்.
- (எழுந்திருக்கும்.)
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும. 15395
பணம் என்றால் பேயாய்ப் பறக்கிறான்.
- (பறக்கிறது.)
பணம் என்ன செய்யும்? பத்து விதம் செய்யும்.
- (பத்து வகை.)
பணம் என்ன பாஷாணம்; குணம் ஒன்றே போதும்.
பணம் கண்ட தேவடியாள் பாயிலே படுக்க மாட்டாள்.
பணம் குணம் ஆகும்; பசி கறி ஆகும். 15400
பணம் செல்லா விட்டால் அரிசிக்காரிக்கு என்ன?
பணம் பசியைப் போக்காது
பணம் பணந்தோடே சேரும்; இனம் இனத்தோடே சேரும்,