தமிழ்ப் பழமொழிகள்
183
பணம் பந்தியிலே; குலம் குப்பையிலே,
- (பந்தலிலே, குணம்.)
பணம் பாதாளம் மட்டும் பாயும். 15405
பணம் பார்த்துப் பண்டம் கொள்; குணம் பார்த்துப் பெண்ணைக் கொள்.
பணம் பாஷாணம்.
பணம் பெரிதா? குணம் பெரிதா?
பணம் பெரிதோ? பழமை பெரிதோ?
பணம் பெருத்தது நீலகிரி. 15410
பணம் போனால் சம்பாதிக்கலாம்; குணம் போனால் வராது.
பணம் போனாலும் குணம் போகாது.
பணம் வேண்டும்; அல்லது பத்துச் சனம் வேண்டும்.
பணமும் பத்தாய் இருக்க வேண்டும்; பெண்ணும் முத்தாய் இருக்க வேண்டும்.
- (+முறையும் அத்தை மகளாய் இருக்க வேண்டும்.)
பணி செய்வோன் வாயும் சங்குப் பின்னுமாய்ப் பேசுகிறான். 15415
பணியாரம் தின்னச் சொன்னார்களா? பொத்த லை எண்ணச் சொன்னார்களா?
பணியாரமோ கிலுகிலுப்போ?
பக்தங்கி கல்யாணம் பகலோடே.
- (புத்தங்கி-சாமவேதி.)
பத்தங்கியானையும் பலாக்காயையும் பார்த்த இடத்தில் சிராத்தம் பண்ணலாம்.
பத்தரை மாற்றுப் பசுந்தங்கம். 15420
பத்தாம் பசலிப் பேர் வழி.
பத்தாம் பேறு பாடையில் வைக்கும்.
பத்தாம் வீட்டைப் பார்ப்பான் பதவியைக் கொடுப்பான்.
- (சோதிடம்)
பத்தியத்திற்கு முருங்கைக்காய் கொண்டுவரச் சொன்னால் பால் தெளிக்க அகத்திக்கீரை கொண்டு வருகிறான்.
- (பால் வாங்கி வா என்றால்)
பத்தியம் இருந்தாலும் மருந்து எதற்கு? பத்தியம் இல்லா விட்டாலும் மருந்து எதற்கு? 15425