பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

183



பணம் பந்தியிலே; குலம் குப்பையிலே,

(பந்தலிலே, குணம்.)

பணம் பாதாளம் மட்டும் பாயும். 15405


பணம் பார்த்துப் பண்டம் கொள்; குணம் பார்த்துப் பெண்ணைக் கொள்.

பணம் பாஷாணம்.

பணம் பெரிதா? குணம் பெரிதா?

பணம் பெரிதோ? பழமை பெரிதோ?

பணம் பெருத்தது நீலகிரி. 15410


பணம் போனால் சம்பாதிக்கலாம்; குணம் போனால் வராது.

பணம் போனாலும் குணம் போகாது.

பணம் வேண்டும்; அல்லது பத்துச் சனம் வேண்டும்.

பணமும் பத்தாய் இருக்க வேண்டும்; பெண்ணும் முத்தாய் இருக்க வேண்டும்.

(+முறையும் அத்தை மகளாய் இருக்க வேண்டும்.)

பணி செய்வோன் வாயும் சங்குப் பின்னுமாய்ப் பேசுகிறான். 15415


பணியாரம் தின்னச் சொன்னார்களா? பொத்த லை எண்ணச் சொன்னார்களா?

பணியாரமோ கிலுகிலுப்போ?

பக்தங்கி கல்யாணம் பகலோடே.

(புத்தங்கி-சாமவேதி.)

பத்தங்கியானையும் பலாக்காயையும் பார்த்த இடத்தில் சிராத்தம் பண்ணலாம்.

பத்தரை மாற்றுப் பசுந்தங்கம். 15420


பத்தாம் பசலிப் பேர் வழி.

பத்தாம் பேறு பாடையில் வைக்கும்.

பத்தாம் வீட்டைப் பார்ப்பான் பதவியைக் கொடுப்பான்.

(சோதிடம்)

பத்தியத்திற்கு முருங்கைக்காய் கொண்டுவரச் சொன்னால் பால் தெளிக்க அகத்திக்கீரை கொண்டு வருகிறான்.

(பால் வாங்கி வா என்றால்)

பத்தியம் இருந்தாலும் மருந்து எதற்கு? பத்தியம் இல்லா விட்டாலும் மருந்து எதற்கு? 15425