தமிழ்ப் பழமொழிகள்
187
பதனம் பத்துக்கு எளிது.
- (பத்துக் கழஞ்சு)
பதி இல்லாத பூனை பரதேசம் போயிற்றாம், நெத்திலி மீனை வாயிலே கவ்விக் கொண்டு,
பதிவிரதா பத்தினி கதை கேட்டு வந்தேன்; பட்டுக் கிடப்பாய் காலை மடக்கு. 15495
பதிவிரதை ஆனால் தேவடியாள் வீட்டிலும் தங்கலாம்.
பதிவிரதைக்குப் பர்த்தாவே தெய்வம்.
பதிவிரதையைக் கெடுக்கப் பதினைந்து பொன்.
பதின்காதம் போனாலும் தன் பாவம் தன்னோடே.
பதின்காதம் போனாலும் பழக்கம் வேண்டும், 15500
பதின்மர் பாடும் பெருமாள்.
பதினாயிரம் கொடுத்தாலும் பதைபதைப்பு ஆகாது.
பதினாறு பல்லில் ஒரு நச்சுப் பல் இருக்கும்.
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும்.
பதுங்குகிற புலி பாய்ச்சலுக்கு அடையாளம். 15505
- (பதுங்குகிறதெல்லாம்)
பதுமை போல நடிக்கின்றான்.
பத்தடி போல் துள்ளிப் பரிதவிக்கிறது.
பத்தைக் கண்டு பயந்த ஆனை போல.
பந்தம் கெட்டு மோட்சம் காணி யாட்சி ஆகும்.
பந்தம் சொன்னால் படைக்கு ஆகார், 15510
பந்தமும் கூத்தும் விடிந்தால் தெரியும்.
பந்தல் இல்லாத வாழைக்காய் பரப்பிக் கொண்டு ஆடுதாம்.
பந்தல் பரக்கப் போட்டான் சந்திரநாதன்; வந்தி நெருங்க வைத்தான் பத்திர பாகு.
பந்திக்கு இல்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறதாம்.
- (தொங்கவா?)
பந்திக்கு முந்த வேண்டும்; படைக்குப் பிந்த வேண்டும். 15515
- (பந்திக்கு முந்திக்கொள்)
பந்திக்கு வேண்டாம் என்றால் இலை பீற்றல் என்றானாம்.
- (பொத்தல் என்றான்)
பந்தியில் உட்காராதே என்றால் இலை பீற்றல் என்றானாம்.
- (பொத்தல் என்றான்)