188
தமிழ்ப் பழமொழிகள்
பப்பு மிஞ்சினால் உப்பு; உப்பு மிஞ்சினால் பப்பு.
பம்பரமாய் ஆட்டி வைக்கிறார்.
பயணக்காரன் பைத்தியக்காரன். 15520
பயந்த மனுஷி பரிமாறப் போனாளாம்; பந்தியில் இருந்தவர்கள் எல்லாம் எடுத்தார்கள் ஓட்டம்.
- (பரிமாற வந்தாள். இருந்தவர்கள் எல்லாம் எழுந்து போய் விட்டார்கள்.
இருந்த ஆண்கள் எல்லாம்.)
பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
பயம் உள்ளவரை ஜயம் இல்லை.
பயல் சரண் உயரம்; பழையது முழ உயரம்.
பயற்றங்கூழுக்குப் பங்கு இழந்தவன் கதைபோல. 15525
பயற்றம் பருப்புப் பத்தியத்துக்கு.
பயறு பயறு என்ற பிள்ளை பசறு பசறு என்கிறது.
- (என்கிறதாம்.)
பயிர் கிளைத்தால் ஆச்சு; களை கிளைத்தால் போச்சு.
பயிர் செழிக்கப் பார் செழிக்கும்.
பயிர் பலிக்கும் பாக்கியவானுக்கு; பெண்டு பலிக்கும் புண்ணியவானுக்கு. 15530
பயிருக்குக் களை எடுத்தாற்போல.
பயிரைக் கொடுத்துப் பழந்தொழி வாங்கு.
- (பழம் புழுதி.)
பயிரை வளர்ப்பான் உயிரை வளர்ப்பான்.
பர்த்தாவும் பார்த்திருக்கப் புத்திரனும் கொள்ளி வைக்க.
- (சுமங்கலியாகச் சாதலைக் குறிப்பது.)
பரக்கத் தலை விரித்துப் பட்டினியாச் சீராட்டி. {{float_right|15535}
பரக்கப் பரக்க அலைந்தாலும் இருக்கிறதுதான் இருக்கும்,
பரக்கப் பரக்கப் பாடுபட்டும் படுக்கப் பாய் இல்லை.
பரணி அடுப்புப் பாழ் போகாது.
பரணியான் பாரவன்.
பரணியில் பிறந்தவன் தரணி ஆள்வான். 15540
பரத்தைக்குக் கொடுக்கும் பணத்தைக் குடிப் பெண் வாங்கிக் குலம் கெடுவாளா?
பரதம் எப்படி, பக்தர்கள் அப்படி.
பரதவர் சேரியில் பரிமளப் பொருள் விற்றது போல்,