தமிழ்ப் பழமொழிகள்
193
பலாக் காயையும் சாம்பானையும் கண்ட இடத்தில் வெட்டு.
- (சாமானையும்.)
பலாப் பழத்துக்கு ஈப் பிடித்து விடுவார் உன்டோ?
- (ஈ பிடித்து விடவேண்டுமா.)
பலாப் பிஞ்சு கண்ட இடத்திலே திவசம் செய்ய வேண்டும். 15655
பலிக்குப் போகிற ஆடுபோலே.
பவிசு கெட்ட பாக்கு வெட்டிக்கு இரு புறமும் தீவட்டியாம்.
- (பாட்டிக்கு.)
பழக்கம் கொடியது. பழக்கம் வழக்கம்.
பழக்கமேணும் சரசம் இன்றி ரவிக்கையில் கைபோடக் கூடாது. 15660
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பழகாத நாய்மாதிரி விழுகிறான்.
பழகிய பகையும் பிரிவு இன்னாது.
- (நற்றிணை.)
பழங்கணக்குப் பருத்தி விதைக்கும் ஆகாது.
பழங்காலைத் தூர்க்காதே; புதுக்காலை வெட்டாதே. 15665
- (தூர்க்கவும் வேண்டாம்)
பழத்திலே பழம் மிளகாய்ப் பழம்.
பழத்துக்குத் தெரியும்; வௌவாலுக்குத் தெரியும்.
பழந்தீர் மரவயிற் பறவை போல.
பழந் தேங்காயிலேதான் எண்ணெய்.
பழம் நழுவிப் பாலில் விழுந்தது; அதுவும் நழுவி வாயில் விழுந்தது. 15670
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல.
பழம்பகை நட்பாதல் இல்.
- (பழமொழி நானுாறு.)
பழம் பழுத்தால் கொம்பில் தங்காது.
பழம் புண்ணாளி பாதி வைத்தியன்.
- (பர்யாரி.)
பழமும் தின்று கொட்டையும் போட்டான். 15675
பழமை பாராட்ட வேண்டும்.
பழமை பாராட்டினால்தான்.
பழமொழியில் உமி இல்லை.