பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

193




பலாக் காயையும் சாம்பானையும் கண்ட இடத்தில் வெட்டு.

(சாமானையும்.)

பலாப் பழத்துக்கு ஈப் பிடித்து விடுவார் உன்டோ?

(ஈ பிடித்து விடவேண்டுமா.)

பலாப் பிஞ்சு கண்ட இடத்திலே திவசம் செய்ய வேண்டும். 15655


பலிக்குப் போகிற ஆடுபோலே.

பவிசு கெட்ட பாக்கு வெட்டிக்கு இரு புறமும் தீவட்டியாம்.

(பாட்டிக்கு.)

பழக்கம் கொடியது. பழக்கம் வழக்கம்.

பழக்கமேணும் சரசம் இன்றி ரவிக்கையில் கைபோடக் கூடாது. 15660


பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

பழகாத நாய்மாதிரி விழுகிறான்.

பழகிய பகையும் பிரிவு இன்னாது.

(நற்றிணை.)

பழங்கணக்குப் பருத்தி விதைக்கும் ஆகாது.

பழங்காலைத் தூர்க்காதே; புதுக்காலை வெட்டாதே. 15665

(தூர்க்கவும் வேண்டாம்)


பழத்திலே பழம் மிளகாய்ப் பழம்.

பழத்துக்குத் தெரியும்; வௌவாலுக்குத் தெரியும்.

பழந்தீர் மரவயிற் பறவை போல.

பழந் தேங்காயிலேதான் எண்ணெய்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது; அதுவும் நழுவி வாயில் விழுந்தது. 15670


பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல.

பழம்பகை நட்பாதல் இல்.

(பழமொழி நானுாறு.)

பழம் பழுத்தால் கொம்பில் தங்காது.

பழம் புண்ணாளி பாதி வைத்தியன்.

(பர்யாரி.)

பழமும் தின்று கொட்டையும் போட்டான். 15675


பழமை பாராட்ட வேண்டும்.

பழமை பாராட்டினால்தான்.

பழமொழியில் உமி இல்லை.