பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தமிழ்ப் பழமொழிகள்



பழி ஓரிடம், பாரம் ஓரிடம்.

பழி ஓரிடம், பாவம் ஓரிடம். 15680


பழிக்கு அஞ்சாதவன் கொலைக்கு அஞ்சுவானா?

பழிக்கு அஞ்சு; பாவத்துக்கு அஞ்சு.

பழிக்கு ஆனோர் சிலர்; பழிக்கப் படுவோர் சிலர்.

பழிக்குப் பழி.

பழித்தார் தலையில் பாடு வரும். 15685


பாமுனை பகரேல்.

பழி போட்டுத் தலை வாங்குகிற ஜாதி.

பழி விட்டுப் போகாது.

பழுத்த ஓலையைப் பார்த்துக் குருத்தோலை சிரித்ததாம்.

(பழ இலையை, பச்சை இலை சிரித்ததாம்.)

பழுத்த பழம் போல. 15690


பழுத்த பழம் வௌவாலை அழைக்குமா?

(அழைக்குமாம்.)

பழுத்தல் இல்லாத துணிவு பாரம் இல்லாத கப்பல்.

பழுத்துக் கெடுப்பது பாகல்; பழுக்காமல் கெடுப்பது இரத்தக் கட்டி.

பழுது செய்ததை அறிக்கையிடில் பாதி நிவர்த்தி.

பழுதை என்று கிடக்கப்படவும் இல்லை; பாம்பு என்று நினைக்கப் படவும் இல்லை. 15695


பழுதை என்று மிதிக்கவும் முடியாது; பாம்பு என்று தாண்டவும் முடியாது.

பழுதை பாம்பாய்த் தோன்றுவது போல.

பழுதையைப் பார்த்துப் பாம்பு என்கிறான்.

பழைய ஆத்தியை உருவத் தெரியும்; பருப்புச் சட்டியைக் கழுவத் தெரியும்; அவிட்டத்திற்கு ஆக்கத் தெரியும்.

(ஆத்தியை உருக்கத் தெரியும்.)

பழைய கறுப்பன் கறுப்பனே; பழைய மண் கிண்ணி கிண்ணியே. 15700


பழைய குருடி கதவைத் திறடி.

பழையது சாப்பிட்டுப் பள்ளிக்குப் போகச் சொன்னால் சுடு சோற்றைத் தின்று விட்டுச் சுற்றிச் சுற்றி வருகிறான்.

பழையது போடு; உனக்குப் பசியா வரம் தருகிறேன்.

பழையது மிகுந்த இடமே சாணியாட்சி.

பழைய நினைப்படா பேராண்டி. 15705