பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தமிழ்ப் பழமொழிகள்



பள்ளிக்கூடம் போகிறதற்கு முன்னே பயறு பயறு என்று சொன்னதாம்; பள்ளிக்கூடம் போன பிறகு பசறு பசறு என்றதாம்.

பள்ளி கெட்டால் பத்துச் சேர் மண்வெட்டி; பார்ப்பான் கெட்டால் சத்திரம் சாவடி.

பள்ளி கையில் பணம் இருந்தால் பாதி ராத்திரியில் பாடுவான்.

பள்ளி கொழுத்தால் பாயில் தங்கமாட்டான்; நண்டு கொழுத்தால் வளையில் தங்காது.

பள்ளிச் சிநேகிதம் பசுமரத்தாணி. 15735


பள்ளி தேய்த்திருக்கான்; பார்ப்பான் குளித்திருக்கான்.

பள்ளிப் பிள்ளை என்றால் செல்வம் குறையுமா?

(செல்லம்.)

பள்ளிப் பிள்ளைக்குப் பகுத்தறிவு ஏது?

பள்ளி பாக்குத் தின்றால் பத்து விரலும் சுண்ணாம்பு,

பள்ளி புத்தி பறையன் பானையிலே, 15740


பள்ளி மச்சான் கதை போல.

பள்ளி முத்தினால் படையாச்சி.

பள்ளியை நினைத்துப் பாயில் படுத்தால் பரமசிவன் போல் கனவு வரும்.

(பிள்ளை வரம்)

பள்ளியையும் இரும்பையும் பதம் பார்த்து அடி.

பள்ளியையும் பனங்காயையும் பதம் பார்த்து அடிக்கவேண்டும். 15745


பள்ளி வாழ்வு பத்து வருஷம்; பார்ப்பான் வாழ்வு முப்பது வருஷம்,

பள்ளி வெற்றிலை போட்டால் பத்து விரலும் சுண்ணாம்பு.

பள்ளி வைத்திய நாதன் கோயில்.

பள்ளுப் பறை பதினெட்டுச் சாதி.

பளியரிடம் புனுகு விற்றது போல. 15750


பற்றாததற்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திர நேரம் குடை.

(யாழ்ப்பாண வழக்கு, பற்றாப் பொறுக்கிக்குப் பவிசு வந்தால் பாதி ராத்திரியிலே குடை.)

பற்றுக் கோலுக்கு என்று பிடித்தால் அரிவாள் பிடிக்கு வந்துநிற்கும்.

பற்றுப் பறக்கடிக்கும்; எச்சில் இரக்கப் பண்ணும்.

பற்று விட்டால் சித்தி.

(சித்து.)

பறக்கிற குருவி சிறகிலே இறை கொண்டு போமா? 15755