200
தமிழ்ப் பழமொழிகள்
பனிக்குப் பலிக்கும் வரகு; மழைக்குப் பலிக்கும் நெல்.
பனி நீராற் பாவை செய்தாற் போல.
- (தேவாரம்.)
பனிப் பெருக்கிலே கப்பல் ஓட்டலாமா? 15830
பனி பெய்தால் மழை இல்லை; பழம் இருந்தால் பூ இல்லை.
பனி பெய்தால் வயல் விளையுமா?
பனி பெய்து கடல் நிறையுமா?
பனி பெய்து குளம் நிரம்புமா? மழை பெய்து குளம் நிரம்புமா?
பனியால் குளம் நிறைதல் இல். 15835
- (பழமொழி நானுாறு.)
பனியிலே கப்பல் ஓட்டலாமா?
பனியை நம்பி ஏர் பூட்டினது போல.
பனை அடியில் இருந்து பால் குடித்தாலும் சம்சயம்.
பனை ஆயிரம்; பாம்பு ஆயிரம்.
பனை இருந்தாலும் ஆயிரம் வருஷம்; இறந்தாலும் ஆயிரம் வருஷம். 15840
பனை ஏறியும் பானை தொடாது இறங்கினாற்போல.
- (பானை தொடவில்லை.)
பனை ஏறி விழுந்தவனை ஆனை ஏறி மிதித்தது போல.
- (பனையாலே விழுத்தவனை மாடேறி மிதித்தது போல.)
பனை ஏறுபவனை எந்த மட்டும் தாங்குகிறது?
பனை ஓலையில் நாய மொண்டது போல.
- (கடா மூண்டது போல.)
பனைக்குப் பத்தடி. 15845
பனை நிழலும் நிழலோ? பகைவர் உறவும் உறவோ?
பனை நின்று ஆயிரம்; பட்டு ஆயிரம்.
- (பனை நட்டு ஆயிரம்.)
பனை மட்டையில் மழை பெய்தது போல.
பனை மட்டையில் மூத்திரம் பெய்தது போல.
பனை மரத்தின்கீழ் இருந்து பாலைக் குடித்தாலும் கள் குடித்தான் என்பார்கள். 15850
பனை மரத்துக்கு நிழல் இல்லை; பறையனுக்கு முறை இல்லை.
- (உறவு.)