பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

201



பனை மரத்து நிழல், பாம்பாட்டி வித்தை, தெலுங்கன் உறவு, தேவடியாள் சிநேகம் நாலும் பகை.

பனையில் ஏறுகிறவனை எட்டும் வரையில்தான் தாங்கலாம்.

பனையிலிருந்து விழுந்தவனை பாம்பு கடித்தது போல.

பனையின் நிழலும் நிழலோ? பறையர் உறவும் உறவோ? 15855

(பகைவர் உறவும்.)


பனைவிதை பெரிதாக இருந்தும் நிழல் கொடுக்க மாட்டாது.

பனை வெட்டின இடத்தில் கழுதை வட்டம் போட்டது போல.

பனை வைத்தவன் பார்த்துச் சாவான்; தென்னை வைத்தவன் தின்று சவான்.

பஹு ஜன வாக்யம் கர்த்தப்யம்.