தமிழ்ப் பழமொழிகள்
209
பார்க்கிறவர்களுக்குப் பைத்தியக்காரி; மற்றவர்க்கு எல்லாம் வைத்தியக்காரி.
பார், கேன், மெளனமாய் இரு. 16035
பார்த்த கண்ணும் பூத்துப் பகலும் இரவாயிற்று.
பார்த்த கண்ணும் பூத்துப் போயிற்று.
பார்த்ததைக் கேட்பான் பார்ப்பான்.
பார்த்த முகம் எல்லாம் வேற்று முகம்.
பார்த்தவர்க்கு இன்பம்; படுபவர்க்குத் துன்பம். 16040
பார்த்தால் கிழவனடி; பத்தரை மாற்றுத் தங்கமடி.
பார்த்தால் தெரியுமா? பட்டால் தெரியுமா?
- (வருத்தம்.)
பார்த்தால் பசுப் போல; பாய்ந்தால் புலி போல.
பார்த்தால் பண்டாரம்; பழகி விட்டால் ஐயா!
பார்த்தால் பூனை; பாய்ந்தால் புலி. 16045
பார்த்தால் பைத்தியக்காரன்; பத்துப் பேரை அடிப்பான்.
பார்த்தால் மாடு; பார்க்கா விட்டால் சும்மாடு.
பார்த்தால் மீனுக்குப் பசி ஆறும்; நினைத்தால் ஆமைக்குப் பசி ஆறும்,
பார்த்தாலும் பார்த்தேன்; பார்ப்பானைப் போல் பார்த்ததில்லை.
பார்த்தாலும் மெல்லி; நூற்றுக்கு ஒரு சேவகன். 16050
பார்த்திருக்கத் தின்று விழித்திருக்கக் கை கழுவுவான்.
பார்த்திருந்தவன் பச்சை குத்தினான்; கேட்டிருந்தவன் வறுத்துக் குத்தினான்
- (வற்புறுத்தினாள்.)
பார்த்திருந்தும் பாழும் கிணற்றில் விழுகிறதா?
- (விழுந்தாற் போல.)
பார்த்துப் பார்த்துக் கண் பூத்துப் போச்சு.
பார்ப்பதற்கு அரிய பரப்பிரமம். 16055
பார்ப்பது அறியும் பரப்பிரமம்.
பார்ப்பவருக்கு இன்பம்; படுபவருக்குத் துன்பம்.
பார்ப்பாத்தி அம்மா மாடு வந்தது; பார்த்துக் கொள் பிடிந்துக் கட்டிக் கொள்.
பார்ப்பாத்தி உப்புக் கண்டம் கடித்த கதை.
பார்ப்பாத்தி உப்புக் கண்டம் பறி கொடுத்தது போல, 16060