பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218


பி



பிகுவான சம்பந்தி இழுத்தாராம் இரண்டு இலை. 16245


பிகுவோடு சம்பந்தி கழற்றினாளாம் துணியை.

பிச்சன் வாழைத் தோட்டத்தில் புகுந்ததுபோல.

(தோட்டத்தில்.)

பிச்சை இட்டால் மோட்சம்.

பிச்சை இட்டுக் கெட்டவர்களும் இல்லை; பிள்ளை பெற்றுக் கெட்டவர்களும் இல்லை.

(உண்டோ?)

பிச்சை எடுக்கப் போனாலும் முகராசி வேண்டும். 16250


பிச்சை எடுக்குமாம் பெருமாள்; அத்தைப் பிடுங்குமாம் அனுமார்.

(எடுக்குமாம் கருடன்.)

பிச்சை எடுக்கிறதிலும் பிகுவா?

(வலிவா)

பிச்சை எடுத்தும் சத்துருவின் குடி கெடு.

பிச்சைக்கார நாய்க்குப் பட்டுப் பல்லக்கு.

பிச்சைக்கார நாரிக்கு வைப்புக்காரன் பெருமை; கூலிக்குச் செய்பவனுக்குக் கூத்தியாள் பெருமை. 16255


பிச்சைக்காரன் சோற்றில் சனீசுவரன் புகுந்தது போல.

பிச்சைக்காரன் சோற்றை எச்சில் நாய் பங்கு கேட்டதாம்.

பிச்சைக்காரன் பிச்சைக்குப் போனால் எங்கள் வீட்டுக்காரர் அதுக்குத்தான் போகிறார் என்றாளாம்.

பிச்சைக்காரன் மேலே பிரம்மாஸ்திரம் தொடுக்கிறதா?

பிச்சைக்காரன் வாந்தி எடுத்தாற் போல் 16260


பிச்சைக்காரனுக்கு ஏது கொட்டு முழக்கு?

பிச்சைக்காரனுக்கு ஒரு மாடாம்; அதைப் பிடித்துக்கட்ட ஓர் ஆளாம்.

பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் இருக்கிறதா?

(விடுகிறதா?)