பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

219


பிச்சைக்காரனுக்குப் பிச்சைக்காரன் பொறாமை அதிகம்.

பிச்சைக்காரனை அடித்தானாம்; அடுப்பங்கரையிலே பேண்டானாம். 16265


பிச்சைக்காரனை அடித்தானாம்; சோளியைப் போட்டு உடைத்தானாம்.

(செம்பைப் போட்டு, சோளி-பை.)

பிச்சைக்காரனைக் கடனுக்கு வேலை வாங்கினானாம்.

பிச்சைக்காரனைப் பேய் பிடித்ததாம்; உச்சி உருமத்தில்.

(உருமத்தில் ஜாமத்தில்.)

பிச்சைக்கு அஞ்சிக் குடிபோனாளாம்; பேனுக்கு அஞ்சித் தலையைச் சிரைத்தாளாம்.

பிச்சைக் குட்டிக்குத் துக்கம் என்ன? பெருச்சாளிக்கு வாட்டம் என்ன? 16270


பிச்சைக் குடிக்கு அச்சம் இல்லை.

பிச்சைக்குடி பெரிய குடி.

(பிச்சைக்குப் பெரிய குடி)

பிச்சைக் குடியிலே சனீசுவரன் புகுந்தது போல.

பிச்சைக்குப் பிச்சையும் கெட்டது; பின்னையும் ஒருகாசு நாமமும் கெட்டது.

பிச்சைக்குப் பெரிய குடி, 16275


பிச்சைக்கு மூத்தது கச்சவடம்.

(கச்சவடம் வியாபாரம்.)

பிச்சைக்கு வந்த ஆண்டி இல்லை என்றால் போவாளா?

பிச்சைக்கு வந்த பிராமணா, பெருங்காயச் செம்பைக் கண்டாயோ?

(பெருங்காயச் சிமிழை. என்றாளாம்.)

பிச்சைக்கு வந்தவன் ஆண்டார் இல்லை என்றால் போகிறான்.

பிச்சைக்கு வந்தவனைப் பெண்டாள அழைத்தது போல. 16280


பிச்சைக்கு வந்தவன் எல்லாம் பெண்ணுக்கு மாப்பிள்ளையா?

பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளை ஆனான்.

பிச்சைச் சோற்றிலும் எச்சில் சோறா?

பிச்சைச் சோற்றிலும் குழந்தைச் சோறா?

பிச்சைச் சோற்றிலும் குழைந்த சோறு உண்ணலாமா? 16285

(குழந்தை.)


பிச்சைச் சோற்றுக்கு இச்சகம் பேசுகிறான்.

பிச்சைச் சோற்றுக்கு எச்சில் இல்லை.