222
தமிழ்ப் பழமொழிகள்
பிண்டத்துக்குக் இருக்காது; தண்டத்துக்கு இருக்கும்,
- (கிடைக்காது, தண்டத்துக்கு அகப்படும்.)
பிண்டத்துக்குக் கிடையாது; தண்டத்துக்கு அகப்படாது.
பிண்டம் பெருங்காயம்; அன்னம் விலவாதி லேகியம். 16340
- (அன்னம் கஸ்தூரி.)
பிண்ணாக்குத் தராவிட்டால் செக்கிலே பேளுவேன்.
பிண்ணாக்குத் தின்பாரைச் சுண்ணாம்பு கேட்டால் வருமா?
பிணத்துக்கு அழுகிறாயா? குணத்துக்கு அழுகிறாயா?
பிணத்தை மூடி மணத்தைச் செய்.
பிணம் சுட்ட தடியும் கூடத்தான் போட்டுச் சுடுகிறது. 16345
பிணம் தின்கிற பூச்சி போல.
பிணம் தின்னிக் கழுகு.
பிணம் தூக்குவதில் தலைமாடு என்ன? கால்மாடு என்ன?
பிணம் பிடுங்கத் தின்றவன் வீட்டில் புத்தரிசி யாசகத்துக்குப் போனானாம்.
பிணம் போகிற இடத்துக்குத் துக்கமும் போகிறது. 16350
பிணை ஓட்டினாலும் நெல் கொரிக்கலாம்.
பிணைப்பட்ட நாயே குப்பையைச் சும.
- (மலத்தை.)
பிணைப்பட்டாயோ? துணைப் பட்டாயோ?
பிணைப்பட்டால் குரு; துணைப்பட்டால் சா.
பிணைப்பட்டுக் கொள்ளாதே; பெரும்பாவத்தை உத்தரிப்பாய். 16355
பிணைப்பட்டுத் துணைப் போகாதே.
பிணையில் இட்ட மாட்டின் வாயைக் கட்ட முடியுமா?
பித்தம் கிறுகிறு என்கிறகு; மலம் கரைத்துக் குடி குடி என்கிறது.
பித்தம் பத்து விதம்.
பித்தருக்குத் தம் குணமே செம்மையான பெற்றி. 16360
- (நூலினும் செவ்வை. தண்டலையார் சதகம்.)
பித்தளை சோதித்தாலும் பொன்குணம் வருமா?
- (துலக்கினாலும்.)
பித்தளை நாற்றம் போகாது.
- (அறியாது.)
பித்தளை மணி அற்ற வருக்குப் பொன்மணி என்று பெயர்.