பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

தமிழ்ப் பழமொழிகள்



பிராமணா போஜனப்ரியா.

(பஹுஜனப்ரியா.)

பிராமணார்த்தக்காரனுக்கு நெய்விலை எதற்கு?

பிராமணார்த்தம் சாப்பிட்டுப் பங்கு மனையை விற்றானாம்.

பிரிந்த அன்றைத் தேடித் திரும்பும் பசுவைப்போல.

(வ௫ம்.)

பிரியம் இல்லாத கூடு, பிண்டக்கூடு 16395


பிரியம் இல்லாத சோறு, பிண்டச் சோறு.

பிரியம் இல்லாத பெண்டாட்டியிலும் பேய் நன்று.

பிரியைக் கட்டி இழுப்பேன்.

பிழுக்கை வாரியும் பால்கொள்வர்.

(சுந்தரர் தேவாரம்.)

பிழைக்கப் போன இடத்திலே பிழை மோசம் வந்தது போல. 16400


பிழைக்க மாட்டாத பொட்டை, என் பெண்ணை ஏண்டா தொட்டாய்?

பிழைக்கிற பிள்ளை ஆனால் உள்ளூரிலே பிழைக்காதா?

பிழைக்கிற பிள்ளை ஆனால் பிறந்தபோதே செத்துப் போலிருக்கும்.

பிழைக்கிற பிள்ளை குரைக் கழிச்சல் கழியுமா?

பிழைக்கிற பிள்ளை பிறக்கும் போதே தெரியாதா? 16405


பிழைக்கிற பிள்ளையைக் காலைக் கிளப்பிப் பார்த்தால் தெரியாதா?

பிழைத்த பிழைப்புக்குப் பெண்டாட்டி இரண்டு.

பிழைப்பு இல்லாத நாசுவன் பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம்.

பிழைப்பு இல்லாத நாவிதன் பெண்டாட்டி தலையைச் சிரைத்தானாம்.

பிழை பொறுத்தார் என்று போகிறவர் குட்டுகிறதா? 16410


பிள்ளை அருமை பெற்றவருக்குத் தெரியும்.

(தாயுமானவர் பாடல்.)

பிள்ளை அருமை மலடி அறிவாளா?

பிள்ளை ஆசைக்கு மலச்சீலையை மோந்து பார்த்தாற் போல.

பிள்ளை இருக்கப் பிடித்து விழுங்கி,

பிள்ளை இருக்கப் பிடித்து விழுங்கினாள், கொள்ளா கொள்ளி வயிறே. 16415


பிள்ளை இல்லாச் சொத்துப் பாழ் போகிறதா?

(கொள்ளைக் போகிறதா?)