பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

227



பிள்ளை மலபாதை செய்ததென்று துடையை அறுக்கிறதா?

(மடியில் பேண்டுவிட்டால்.)

பிள்ளையாண்டான் கெட்டிக்காரன்; பொழுது போனால் கண் தெரியாது. 16465


பிள்ளையாய்ப் பிறந்து சோடையாய்ப் போனேனே!

பிள்ளையார் அப்பா, பெரியப்பா, பிழைக்கும் வழியைச் சொல்லப்பா.

பிள்ளையார் குட்டுக் குட்டி ஆயிற்று.

பிள்ளையார் கோயில் பெருச்சாளி போல.

பிள்ளையார் கோயிலில் திருடன் இருப்பான். 16470

(கள்ளன்.)


பிள்ளையார் கோயிலைப் பெருக்கலாம்; மெழுகலாம்; அமேத்தியம் விடித்தால் கண் போய் விடும்.

(பேள மட்டும் கூடாது.)

பிள்ளையார் சதுர்த்திக்கும் மீராசாயபுவுக்கும் என்ன சம்பத்தம்?

பிள்ளையார் சுழி போட்டாயிற்று.

பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது.

பிள்ளையார் பிறகே திருடன் இருக்கிறான்; சொன்னால் கோளாம். 16475


பிவளையார் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க விடமாட்டான்.

பிள்ளையார் வேஷம்.

(-கர்ப்பிணி.)

பிள்ளையாருக்குக் கல்யாணம் நடக்கிறபோது.

பிள்ளையாருக்குப் பெண் கொள்வது போல.

(பெண் பார்த்தது.)

பிள்ளையாரைக் கண்டால் தேங்காயைக் காணோம்; தேங்காயைக் கண்டால் பிள்ளையாரைக் காணோம். 16480


பிள்ளையாரைச் சாக்கிட்டுப் பூதம் விழுங்கிற்றாம்.

பிள்ளையாரைச் சாக்கு வைத்துப் பூசாரி போட்டாற்போல.

பிள்ளையாரைப் பிடித்த சனி அரசமரத்தைப் பிடித்தது போல.

பிள்ளையின் அழகைப் பேளவிட்டுப் பார்த்தால் உள்ள அழகும் ஓட ஓடக் கழிகிறது.

பிள்ளையின் திறமையைப் பேளவிட்டுப் பார்த்தானாம். 16485