பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

தமிழ்ப் பழமொழிகள்



பிள்ளையின் நிறமையை வேலை விட்டுப் பார்.

பிள்ளையின் பாலைப் பீச்சிக் குடிக்கிறதா?

பிள்ளையின் மடியிலே பெற்றவன் உயிர் விட்டால் பெருங்கதி உண்டு.

பிள்ளையும் இல்லை; கொள்ளியும் இல்லை.

பிள்ளையும் மலமும் பிடித்ததை விடா. 16490


பிள்ளையும் பிழுக்கையும் சரி.

பிள்ளையை அடித்து வளர்க்க வேணும்? முருங்கையை ஒடித்து வளர்க்க வேணும்.

பிள்ளையைக் காட்டிப் பூதம் விழுங்குகிறது.

பிள்ளையைப் பெற்றபின்தான் பெயர் இடவேண்டும்.

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுகிறதா? 16495


பிள்ளையை விட்டுத் திருடுவது போல.

பிள்ளை வரம் கேட்கப் போய்ப் புருஷனையே பறி கொடுத்தது போல

பிள்ளை வருத்தம் பெற்றவளுக்குத் தெரியும்; மற்றவளுக்குத் தெரியுமா?

(தாயுமானவர்.)

பிள்ளை வீட்டுக்காரர் சம்மதித்தால் பாதி விவாகம் முடிந்தது போல,

பிறக்காத பிள்ளைக்கு நடக்காத தொட்டில். 16500

(கிடக்காக)


பிறக்கிற பிள்ளையை நம்பி இருக்கிற பிள்ளையைக் கொன்றது போல.

பிறக்கிறபொழுதே முடமானால் இட்டுப் படைத்தால் தீருமா?

(தெய்வத்துக்குப் படைத்தால்; பேய்க்குப் படைத்தால்.)

பிறக்கும்போது தம்பி; பெருத்தால் தாயாதி.

பிறக்கும்போது யார் என்ன கொண்டு வந்தார்?

(தண்டலை யார் சதகம்.)

பிறத்தியார் புடைவையில் தூரம் ஆவது என்றால் கொண்டாட்டம். 16505


பிறத்தியார் வளர்த்த பிள்ளை பேய்ப் பிள்ளை.

பிறத்தியாருக்கு வாத்தியார்.

பிறத்தியானுக்கு வெட்டுகிற குழி தனக்கு.

பிறந்த அன்றே இறக்க வேண்டும்.

பிறந்து இடத்து வண்மையை உடன்பிறந்தானிடத்தில் சொல்கிறதா? 16510