பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

21


சொந்த மாப்பிள்ளையை வீட்டுக்கு அழைக்கப் பறை ஏன்?

சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு உதவுமா? கனவு கண்ட பணம் செலவுக்கு உதவுமா?

சொப்பனத்தில் கண்ட பணம் செலவுக்கு ஆகுமா?

சொப்பிலே சோறு ஆக்கினால் சுளுவுதான்; சும்மா இருந்து பிள்ளை பெற்றால் அழகுதான்.

சொர்க்கத்திலே தோட்டியும் சரி; தொண்டைமானும் சரி. 11570


சொர்க்கத்துக்கு நான் போனால் போகலாம்.

(நான் அகங்காரம்.)

சொர்க்கத்துக்குப் போகிற போதும் கட்கத்திலே மூட்டை ஆகுமா?

(ஏன்?)

சொர்க்கத்துக்குப் போகிற போதும் கட்கத்திலே கழுதைக் குட்டியா?

சொர்க்கத்துக்குப் போகிற போதும் கட்கக்திலே ராட்டினமா?

சொர்க்கத்துக்குப் போகிறபோதும் பக்கத்திலே கூத்தியாரா? 11575


சொர்க்கத்துக்குப் போயும் ராட்டினமா?

சொர்க்கத்துக்குப் போனாலும் கட்கத்திலே அக்ஷயபாத்திரமா?

சொர்க்கத்துக்குப் போனாலும் கட்கத்திலே ஒரு பிள்ளை ஏன்?

சொருக்கி போனாள், சிறுக்கி வந்தாள்.

சொருக்குக் கொண்டைக்காரி, சொக்குப்பொடி போடுவாள். 11580


சொருகி இருந்த அகப்பை சொத்தென்று விழுந்ததாம்.

சொருகிக் கிடந்த அகப்பையும் சோறு அள்ளப் புறப்பட்டது.

சொருகி வைத்த அகப்பை.

சொல் அம்போ, வில் அம்போ?

சொல்கிறது ஒன்று; செய்கிறது ஒன்று. 11585


சொல்கிறவனுக்கு வாய்ச்சொல்; செய்கிறவனுக்குத் தலைச் சுமை.

சொல் கேளாப் பிள்ளையினால் குலத்துக்கு ஈனம்.

சொல்திறம் கூறல் கற்றவர்க்கு அழகு.

சொல்லச் சொல்லச் செவிடி புக்ககம் போனாளாம்.

சொல்லச் சொல்லப் பட்டிப் பெண்ணைப் பெற்றான். 11590


சொல்லச் சொல்ல மட்டி மண்ணைத் தின்றான்.

சொல்லப் போனால் பொல்லாப்பு; சொறியப் போனால் அரையாப்பு.

(நொள்ளாப்பு.)

சொல்லாததை மனையாளுக்குச் சொன்னவன் பட்ட பாடுபோல.