பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

233




பு


புகழ்ச்சியானுக்கு ஈந்தது பூதக்கண்ணாடி.

புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.

புகழால் புண்ணியம்.

புகுந்தடித்துப் போனோம் ஆனால் பிடித்து அடித்துத் தள்ளுவார்களா? 16590


புகை இருந்தால் நெருப்பு இருக்கும்.

புகைக்கினும் காரசில் பொல்லாங்கு கமழாது.

புகைச் சரக்கு வகைக்கு ஆகாது.

புகைந்த கொள்ளி புறத்தே.

(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

புகைந்த வீட்டைச் சுற்றுகிறது. 16595


புகை நுழையாத இடத்தில் புகுந்திடும் தரித்திரம்.

(புகுந்து வரும்.)

புகை நுழையாத இடத்திலும் அவன் நுழைவான்.

புகை நுழையாத இடத்திலும் போலீஸ் நுழையும்.

புகையிலைக்குப் புழுதிக் கொல்லை.

புகையிலையைப் பிரிக்காதே; பெண் பிள்ளை பேச்சைக் கேட்காதே. 16600


புகையிலை விரித்தால் போச்சு; பெண் பிள்ளை சிரித்தால் போச்சு,

புகை வீட்டைச் சுற்றும்.

புங்க நிழலும் புது மண்ணும் போல்.

புங்கப் புகழே, தங்க நிழலே.

புங்கை நிழலுக்கும் புளியைத் தழலுக்கும். 16605


புஞ்சையிற் புதிது; நஞ்சையிற் பழையது.

புட்டுக்கூடை முண்டத்திலும் பொறுக்கி எடுத்த முண்டம்.

புட்பம் என்றும் சொல்லலாம்; புஸ்பம் என்றும் சொல்லலாம்; ஐயர் சொன்னமாதிரியும் சொல்லலாம்.

புடம் இட்ட பொன் போல.

புடைக் கட்டுப் பயிருக்கு மடைக்கட்டுத் தண்ணீர். 16610