தமிழ்ப் பழமொழிகள்
237
புதையல் எடுத்தவனைப் போல.
புயலுக்குப் பின் அமைதி. 16685
புரட்டாசிக் கருக்கல் கண்ட இடத்து மழை.
புரட்டாசிக் காய்ச்சல்.
புரட்டாசிச் சம்பா பொன் போல் விளையும்
புரட்டாசி நடுகை, திரட்சியான நடுகை
புரட்டாசிப் பகலில் பொன் உருகக் காய்ந்து இரவிலே மண் உருகப் பெய்யும் 16690
புரட்டாசி பதினைந்தில் நடவே நடாதே.
புரட்டாசி பாதியில் சம்பா நடு.
புரட்டாசி பெய்தாலும் பெய்யும்; காய்ந்தாலும் காயும்.
புரட்டாசி பெய்து பிறக்க வேணும்; ஐப்பசி காய்ந்து பிறக்க வேணும்.
புரட்டாசி மாதத்தில் கோவிந்தா என்ற குரலுக்குப் பஞ்சமா? 16695
புரட்டாசி மாதத்து நடவு பெரியோர் தேடிய தனம்.
புரட்டாசி மாதத்தில் பேரெள் விதை; சித்திரை மாதத்தில் கூர் எள் விதை.
புரட்டாசி மாதம் முப்பதும் ஒரு கந்தாயமா?
புரட்டாசியில் பொன் உருகக் காய்ந்தாலும் காயும்; மண்ணுருகப் பெய்தாலும் பெய்யும்.
புரட்டாசியில் பொன் உருகக் காயும்; ஐப்பசியில் மண் உருகப் பெய்யும். 16700
புரட்டாசி விதை ஆகாது; ஐப்பசி நடவு ஆகாது.
புரட்டாசியில் வில் போட்டால் புனல் அற்றுப் போகும்.
- (உணவு.)
புரட்டாசி வெயில் பொன் உருகக் காய்ந்து மண் உருகப் பெய்யும்.
புரட்டாசி வெயிலில் பொன் உருகும்.
புரட்டிப் புரட்டி உதைக்கிற போதும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றான். 16705
- (மண் படவில்லை.)
புரண்டும் பத்து நாள்; மருண்டும் பத்து நாள்; பின்னையும் பத்து நாள்.
புரவி இல்லாப் படை போல,