பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

தமிழ்ப் பழமொழிகள்



புரளன் கரை ஏறமாட்டான்.

புராண வைராக்கியம்.

புரிந்ததா மட்டைக்கு இரண்டு கீற்று என்று? 16710


புருவத்தில் பட்டால் கரிக்குமோ? கண்ணில் பட்டால் கரிக்குமோ?

புருவத்துக்கு மை இட்டால் கண்ணிக்கு அழகு.

புருஷக் கைம்பெண்.

புருஷன் அடிக்கக் கொழுந்தனைக் கோபித்தது போல.

புருஷன் அடித்தது பெரிது அல்ல; சக்களத்தி சிரித்ததுதான் கோபம். 16715


புருஷன் இல்லாமல் பிள்ளை பெறலாமா?

புருஷன் செத்தால் வெட்கம்; பிள்ளை செத்தால் துக்கம்.

புருஷன் வலு இருந்தால் பெண்டாட்டி குப்பை மேடு ஏறிச் சண்டை போடுவாள்.

புருஷனுக்கு ஏற்ற மாராப்பு.

புருஷனைப் பார்க்கும்போது தாலி எங்கே என்று தேடினாளாம். 16720


புருஷனை வைத்துக் கொண்டு அவிசாரி போவது போல்,

புல் அற உழாதே; பயிருக்கு வேலி கட்டாதே.

(மாட்டை வேளையோடு கட்டி வேளையோடு உழு; நடுக்கழனியாக வாங்கு என்பது கருத்து)

புல் உள்ள இடத்தில் மேயாது; தண்ணீர் உள்ள இடத்தில் குடிக்க ஒட்டாது.

புல் என்றாலும் புருஷன்; கல் என்றாலும் கணவன்.

புல்லனுக்கு எது சொன்னாலும் கேளான். 16725


புல்லனுக்கு நல்லது சொன்னால் புண்ணிலே கோல் இட்ட கதை.

புல்லும் பூமியும் உள்ள மட்டும் என் நிலத்தை அநுபோகம் பண்.

புல்லும் பூமியும் கல்லும் காவேரியும் உள்ள மட்டும்.

புல்லூரோ, நெல்லூரோ?

(புல்லூர்; திருவாடானைத் தாலூக்காவில் உள்ள ஊர்.)

புல்லைத் தின்னும் மாடுபோலப் புலியைத் தின்னும் செந்நாய் உதவுமா? 16730


புல்லோருக்கு நல்லோர் சொன்ன பொருளாகி விட்டது.

(கம்ப ராமாயணம்)

புல் விற்கிற கடையிலே பூ விற்கிறது.

புலவர் இல்லாத சபையும் அரசன் இல்லாத நாடும் பாழ்.