பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தமிழ்ப் பழமொழிகள்


சொல்லாது பிறவாது; அள்ளாது குறையாது.

சொல்லாது விளையாது; இல்லாது பிறவாது. 11595


சொல்லாமல் இருக்கிறவனே பண்டிதன்.

சொல்லாமல் செய்வார் நல்லோர்; சொல்லியும் செய்யார் கசடர்.

(பெரியோர்.)

சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எதுவரையில் நிற்கும்?

சொல்லிச் செய்வார் சிறியோர்; சொல்லாமற் செய்வார் பெரியோர்; சொல்லியும் செய்வார் கயவர்.

(சொல்லிச் செய்வார் நல்லோர், சொல்லியும் செய்யார் கசடர்.)

சொல்லிப் போக வேணும் சுகத்துக்கு; சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு. 11600


சொல்லின் உறுதி நல்ல நெறியே.

சொல்லுக்கு அரிச்சந்திரன்.

சொல்லுக்குச் சொல் சிங்காரமா?

(சிங்காரச் சொல்லா?)

சொல்லுக்கும் பொருளுக்கும் எட்டாதான்; சோதிக்கும் சாதிக்கும் நடு ஆனான்.

சொல்லும் சொல், ஆக்கமும் கேடும் தரும். 11605


சொல்லும் சொல் கேட்டால் சுட்டாற் போல் கொடுப்பார்.

சொல்லும் பொருளும் தோன்றும் கல்வி.

சொல்லுவதிலும் செய்து காட்டுதல் நல்லது.

(மேல்.)

சொல்வது யார்க்கும் எளிது; சொல்லியபடி செய்தல் அரிது.

சொல்வது லேசு, செய்வது அல்லவா பிரயாசம்? 11610


சொல்ல வல்லவனை வெல்லல் அரிது.

சொல்லியும் கொடுத்து எழுதியும் கொடுத்துப் பின்னோடே போனாளாம்.

சொல்வதைக் கேளாத பிள்ளையும் நீட்டின காலை மடக்காத நாட்டுப் பெண்ணும்.

சொல்வதை விடச் செய்வது மேல்.

சொல்வளம் இல்லாத நற்கதை, சொல்லில் அதுவே துர்க்கதை. 11615


சொல்வார் எல்லாம் துணிவாரா தீப் பாய?

சொல்வார் சொன்னால் கேட்பாருக்கு மதி எங்கே போச்சு?

(மதி இல்லையா.)