பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

239



புலவர் வறுமை பூமியிலும் பெரிது.

புலவருக்கு வெண்பாப் புலி. 16735


புலி அடிக்கும் முன்னே கிலி அடிக்கும்.

(கிலி பிடிக்கும்.)

புலி இருக்கிற காட்டில் பசு போய்த் தானே மேயும்?

புலி இருந்த குகையில் போகப் பயப்படுகிறதா?

புலி இளைத்தாலும் புல்லைத் தின்னாது.

புலி ஏகாதசி விரதம் பிடித்தது போல. 16740


புலிக் காட்டிலே புகுந்த மான் போல.

(புலிக் குகையிலே.)

புலிக்கு அஞ்சாதவன் படைக்கு அஞ்சான்.

புலிக்கு அரிய உணவைப் பூனை புசிக்குமோ?

புலிக்குத் தன் காடு பிறவி காடு இல்லை.

(அசல் காடு)

புலிக்குத் தன் காடு வேற்றுக் காடு உண்டா? 16745

(பிறர் காடு என்று கிடையாது.)


புலிக்குப் பயந்தவர்கள் எல்லாரும் என்மேல் படுத்துக் கொள்ளுங்கள்.

(பொட்ட வந்து)

புலிக்குப் பயந்து பூனை புழுக்கையை மூடுமாம்.

புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?

(பூனை ஆகுமா?)

புலிக்குப் பிறந்தது நகம் இல்லாமல் போகுமா?

புலிக்குப் புதர் துணை; புதருக்குப் புலி துணை. 16750


புலிக் கூட்டத்தில் மான் அகப்பட்டது போல.

புலி குத்தின சூரி என்று கையில் எடுத்தாலும் போதும்; பூனை குத்தின சுளுக்கி என்று கையில் எடுத்தால் பெருமையா?

(எடுத்தாலும் பெருமை)

புலி செவி திருகிய மத களிறு.

புலி நகம் படாவிட்டாலும் அதன் மீசை குத்தினாலும் விஷம்.

(குத்தினால் அதுவே விஷம்)

புலிப் பாய்ச்சல் பாய்கிறான். 16755


புலிப்பால் குடித்தவன் போல் இருக்கிறான்.

புலிப்பால் வேண்டுமானாலும் கொண்டு வருவான்.