தமிழ்ப் பழமொழிகள்
239
புலவர் வறுமை பூமியிலும் பெரிது.
புலவருக்கு வெண்பாப் புலி. 16735
புலி அடிக்கும் முன்னே கிலி அடிக்கும்.
- (கிலி பிடிக்கும்.)
புலி இருக்கிற காட்டில் பசு போய்த் தானே மேயும்?
புலி இருந்த குகையில் போகப் பயப்படுகிறதா?
புலி இளைத்தாலும் புல்லைத் தின்னாது.
புலி ஏகாதசி விரதம் பிடித்தது போல. 16740
புலிக் காட்டிலே புகுந்த மான் போல.
- (புலிக் குகையிலே.)
புலிக்கு அஞ்சாதவன் படைக்கு அஞ்சான்.
புலிக்கு அரிய உணவைப் பூனை புசிக்குமோ?
புலிக்குத் தன் காடு பிறவி காடு இல்லை.
- (அசல் காடு)
புலிக்குத் தன் காடு வேற்றுக் காடு உண்டா? 16745
- (பிறர் காடு என்று கிடையாது.)
புலிக்குப் பயந்தவர்கள் எல்லாரும் என்மேல் படுத்துக் கொள்ளுங்கள்.
- (பொட்ட வந்து)
புலிக்குப் பயந்து பூனை புழுக்கையை மூடுமாம்.
புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
- (பூனை ஆகுமா?)
புலிக்குப் பிறந்தது நகம் இல்லாமல் போகுமா?
புலிக்குப் புதர் துணை; புதருக்குப் புலி துணை. 16750
புலிக் கூட்டத்தில் மான் அகப்பட்டது போல.
புலி குத்தின சூரி என்று கையில் எடுத்தாலும் போதும்; பூனை குத்தின சுளுக்கி என்று கையில் எடுத்தால் பெருமையா?
- (எடுத்தாலும் பெருமை)
புலி செவி திருகிய மத களிறு.
புலி நகம் படாவிட்டாலும் அதன் மீசை குத்தினாலும் விஷம்.
- (குத்தினால் அதுவே விஷம்)
புலிப் பாய்ச்சல் பாய்கிறான். 16755
புலிப்பால் குடித்தவன் போல் இருக்கிறான்.
புலிப்பால் வேண்டுமானாலும் கொண்டு வருவான்.