240
தமிழ்ப் பழமொழிகள்
புலிப்பாலைக் கொணர்ந்தவன் எலிப்பாலுக்கு அலைந்தானாம்,
புலி பசித்தால் புல்லைத் தின்னுமா?
- (தின்னாது)
புலி பதுங்கிப் பாயும். 16760
புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
புலி புலி என்று ஏமாற்றுவது போல.
புலிமேல் வீச எடுத்த கத்தியைப் பூனைமேல் வீசுகிறதா?
புலியின் கைப்பட்ட பாலகனைப் போல
புலியின் முகத்தில் உண்ணி எடுக்கலாமா? 16765
புலியும் பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிக்க.
புலியும் பசுவும் பொருந்தி வாழ்ந்தாற்போல.
புலியூருக்குப் பயந்து நரியூருக்கு வந்தேன்; நரியூரும் புலியூராய்ப் போயிற்று.
புலியூருக்குப் பயந்து புத்தூருக்குப் போனால் புத்தூரும் புலியூரான கதை.
- (மதுரைப்பக்க வழக்கு)
புலியூரை விட்டு எலியூருக்குப் போக, எலியூரும் புலியூர் ஆனது போல. 16770
புலியை இடறின சிதடன் போல.
- (சிதடன்-குருடன்.)
புலியைக் கண்ட மான் போல.
புலியைக் கண்டால் கிலி.
புலியைப் பார்த்த நரி சூடிக் கொண்டது போல.
- (பூனை சூடிக் கொண்டது போல.)
புலியை விடக் கிலி பெரிது. 16775
புலி வயிற்றில் பிறந்தால் நகம் இல்லாமல் போகுமா?
புலையனுக்குப் பூமுடி பொறுக்குமா?
புலையனுக்கு வாக்குச் சுத்தியும் ஆணையும் இல்லை.
- (சுத்தமும்.)
புலையாடியும் பொருளைத் தேடு; பொருள் வந்து புலையை நீக்கும்.
புலையும் கொலையும் களவும் தவிர். 16780
புவி அரசர் போற்றும் கவி அரசர் கம்பர்.
புழுக்கை ஒழுக்கம் அறியாது; பித்தளை நாற்றம் அறியாது.
புழுக்கை ஒழுக்கம் அறியுமா? பிண்ணாக்குக் கட்டி பதம் அறியுமா?