பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

தமிழ்ப் பழமொழிகள்



புளியம் பழத்துக்குப் புளிப்புப் புகுதவிட வேணுமா?

(புகுதவிட வருகிறாயோ?)

புளியம் பழமும் ஓடும் போல.

புளிய மரத்தில் ஏறினவன் நாக்கு எரிவு காணாமுன் இறங்குவானா?

புளிய மரத்தில் ஏறினவன் பல் கூசினால் இறங்குவான்.

(நாக் கூசினால்.)

புளிய மரத்துப் பிசாசு பிள்ளையாரையும் பிடித்ததாம். 16815


புளிய மரத்தைக் கண்டால் வாயும் நில்லாது; வீதியிலே போகிற நாயைக் கண்டால் கையும் நில்லாது.

புளியும் ஓடும் போல் ஒட்டாமல் இருக்கிறது.

புளி வற்றினால் கரைக்கலாம்; பிஞ்சு வற்றினால் கரைக்கலாமா?

புளுகினாலும் பொருந்தப் புளுக வேண்டும்.

புற்றில் ஆந்தை விழிப்பது போல விழிக்கிறான். 16820


புற்றில் ஈசல் புறப்பட்டது போல.

புற்றில் ஈசல் புறப்பட்டாலும் மண்ணில் கறையான் கூடினாலும் மழை வரவே வரும்.

(பெய்யவே பெய்யும்.)

புற்றில் கால் இட்டாற் போல.

புற்றில் கிடந்த புடையன் எழுந்தது போல.

புற்றிலிருந்து ஈசல் புறப்பட்டது போல. 16825


புற்று அடிமண் மருந்தும் ஆகும்.

புறக்குடத்துத் தண்ணீர் போல.

புறக் குற்றம் அறியப் பிடரியிலே கண்.

புற மடையில் பொலியைத்துவி அடைக்கப் பார்த்தானாம்.

புறமுதுகு காட்டி ஓடாதே. 16830


புறாவுக்கு எறிந்த கல்லை மடியில் கட்டுகிறதா?

புன்சிரிப்புக்கு மருந்து சாப்பிடப் போய் உள்ள சிரிப்பும் போச்சுதாம்.

(குஞ்சிரிப்புக்கு)

புன்டெயிற் புதியது; நன்செயிற் பழையது.

புன்னாலைக் கட்டுவன் பாழ்ப்பட்டுப் போவார்.

(புன்னாலைக் கட்டுவான்-யாழ்ப்பாணத்தில் உள்ள ஓர் ஊர். யாழ்ப்பாண வழக்கு)

புஷ்பம் கொடுத்த புண்ணியவதி. 16835


புஸ்தகம் ஹஸ்த பூஷணம்,